38. கட்டிய கழலினை கறங்கக் காவிதிப்
பட்டம் தடைக்திறை பார்வை தாங்கிகள்
தட்டிலாத் தமிழ்ப்படைத் தலைவ ராயரை
மட்டவிழ் தும்பைதய் மறவ ரேத்துவர்,
37. சினத்துமே செல்லுமிச் செழுந்த மிழ்ப்படைக்
கெனைத்தவர் பிழைத்தன நிறுதி காணுவர்
இனித்தடை யிலையென விரங்கி நீள்கொடி
மனத்தலை மடந்தையர் வள்ளை பாடுவர்.
38. தானை யை யிலகுபைந் தழைய தாக்கியே
தோனிவந் தொழுகுநீர்ச் சோரி தேக்கியே
யானைக ளுகளுசே மதனி லாரியர்
நானுனி முடித்தலை நடுவ மென்பரால்.
38, பெற்றவ ருவப்புறப் பிழைத்த லின்றியே
பெற்றலிவ் வுடற்பயன் பெற்ற மின்றென
உற்றவ ரோடுதா முறுதி யாய்ப்பெறுங்
கொற்றம திவையெனக் கூறு வார்சிலர்.
மாணிழை விறலியர் மகிழின் விம்முவர்
பூணிய பறைகுழல் புதிது பண்ணுவர்
யாணரின் றேயடைந் தேமென் றார்வொடு
பாணர்கள் சீறியாழ்ப் பண்ணு வாரரோ.
41. அல்லொடு பகலுறை யமர்ந்த தாழ்வுபோய்ப்
புல்லியே புகையுடற் புதிய வாழ்வுறும்
பல்லிய படைக்கலம் பழுது பார்த்திடக்
கொல்லர்க ளுதுலை குருகை நோக்குவர்.
36. மட்டு - மணம், தேன்.
37. வள் ளை - உலக்கைப் பாட்டு.
38. தோல் நிலத்து • தோலினின்று தோன்றி, பால்
நுனி-தொங்கும் நுனி. உகளுதல் - திரிக் அடிக்குதல்.
41. புல்லுதல் - பொருந்துதல், பல்லிய் - பலவாகிய,
உலகுருகு-உலையையும் துருத்தியையும்,
பக்கம்:இராவண காவியம்.pdf/426
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
