பக்கம்:இருட்டு ராஜா.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123இருட்டு ராஜா

 களங்கப்பட்டவளாத்தான் அவ இருப்பா. ஊரிலேயும் கெட்ட பேரு தான் நிலைக்கும். அதனாலே அவளுடைய வாக்கையும் பாதிக்கப்படும். அவளுக்குக் கல்யாணம் ஆகிறதும் பெரிய பிரச்னையாகத் தான் ஆகிப்போகும். மூணு நாலு வருசம் கழியட்டும், மூடி மறைச்சு, துர தொலையிலே மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணிக் கொடுத்திடலாம்னு நினைச்சாலும், அதிலும் நடைமுறை சிக்கல்கல் ஏற்படும் கல்யாணத்தை கலைகிறதுக்குள்ளே உண்மை விளம்பின்னு எவனாவது மொட்டைக் கடுதாசி எழுதிப் போடுவான். மூட்டை கட்டிக்கிட்டு ஊரு தேடிப்போயி, மாப்பிள்ளை வீட்டுக்காரங்ககிட்டே பெண்ணைப்பத்தி வத்திவச்சிட்டு வாறதுக்கு நம்ம ஊரிலே ஆளுக ரெடியா இருப்பானுக...”

“ஆமாமா. இதுக்கு முன்னாடியும் அப்படியெல்லாம் செஞ்சிருக்கானுக தான். அது சரி, நீங்க என்ன செய்யலாமுங்கிறீக அண்ணாச்சி?”

“பணபலம் இருந்தா எதையும் வெற்றிகரமா சாதிச்சிடலாம். ஒடிப்போன பெண்ணை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து, எதுவுமே நடக்காதது போல் சமாளிச்சு, நல்ல இடத்திலே கல்யாணம் பண்ணிக் கொடுத்து விடலாம். அப்படியும் நடக்கத்தான் செய்யுது. அல்லது, பணம் எதுவும் இல்லாம, உழைச்சுப் பிழைக்கிற அன்றாடங் காய்ச்சிகள் மத்தியிலும் இது மாதிரி விவகாரங்கள் பெரிய பிரச்னை ஆவதில்லே. வீட்டை விட்டு வெளியேறி அல்லும் அவளும் சேர்ந்து, வாழ்றவரை வாழ்வாங்க. இல்லேன்னா பிரிஞ்சு போவாங்க. அவள் வேறொருத்தனை தேடிக்கிடுவா; அவன் இன்னொருத்தியை சேர்த்துக்கிடுவான். நம்ம மாதிரி ரெண்டுங்கெட்டான் நிலையிலே இருக்கிறவங்க—மத்தியதர வர்க்கம்னு பெரிசா பேர் பண்ணப்படுதே, அவங்க—மத்தியிலேதான் விவகாரம், வில்லங்கம் எல்லாம்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/124&oldid=1140045" இலிருந்து மீள்விக்கப்பட்டது