பக்கம்:இருட்டு ராஜா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்45

 திரிபுரமும் அவள் தோழிகளும் ஒவ்வொரு சொல்லிலும் ‘யின’ சேர்த்து வேகமாகப் பேசப் பழகியிருந்தார்கள். பையன்களுக்கு அந்த பாஷை புரியாது என்ற நினைப்பில், அவர்களைப் பழித்தும் பரிகசித்தும் தங்களுக்குள் வார்த்தை பரிமாறிக் களிப்பதுமுண்டு.

இப்போது அவள், “பெண்கள் விளையாடுகிற, இடத்திலே தடிமாடு புகுந்து விட்டது”என்றும், “எருமை மாடு” என்றும் சொன்னதும், அவளே எதிர்பாராத விதத்தில் முத்துமாலை பேசினான்.

“வியினளையாட்டில் தோயினத்துப் போயின. செயினங் குயினரங்கை பாயினருங்கே. காயினள் காயினள்னு கயினத்துது!”(விளையாட்டில் தோத்துப் போன செங்குரங்கை பாருங்கே, காள்காள்ன்னு கத்துது)

திரிபுரத்துக்கு அழுகை வந்து விட்டது. விம்மி விம்மி அழுது கொண்டே, “பாரு பாரு. அப்பா கிட்டே சொல்றேன்” என்று சொல்லியவாறு போனாள்.

விளையாட்டு வினையில் முடிந்தது.

அவள் தன் அப்பாவிடம் சொல்ல.அவர் முத்துமாலையின் பெரியப்பாவான பாபநாசம் பிள்ளை,தங்கராசுவின் அப்பா பிச்சு மணியா பிள்ளை, மற்றும் பல பெரியவர்களிடமும் சொல்லிவைத்தார். “பையன்களை கண்டிச்சு வையுங்க!” என்றார். தன் மகளிடமும் அடக்க ஒடுக்கமாக இருக்கும்படி உபதேசித்தார்.

முத்துமாலைக்கு அப்போது பதினாலு வயசு. பெரியப்பாவிடம் அரிவாளைத் துாக்கி வந்து கலாட்டா பண்ணுவதற்கு முந்தி நடந்தது இது.

பாபநாசப் பிள்ளை, “ஏன் இதுமாதிரி எல்லாம் பண்ணுறே, முத்து? நல்லப் பிள்ளைன்னு பேரு எடுப்பியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/47&oldid=1139012" இலிருந்து மீள்விக்கப்பட்டது