86இருட்டு ராஜா
என்ன போக்கு என்று அடக்கி விடுகிறான். இங்கே இருக்கிற வீட்டையும் நிலத்தையும் வித்துப் பணமாக்கிக் இட்டுவான்னு சொல்லித்தான் இப்போ அவன் அவளை அனுப்பியிருக்கான். நான் உசிரோடு இருக்கிற வரை எது ஒண்ணையும் பேச முடியாது. நான் கண்ணை மூடின பிற்பாடு என்ன வேண்டுமானாலும் பண்ணிட்டுப் போன்னு திரிபுரத்தின் அம்மா கண்டிப்பாச் சொல்விட்டா. அவ என் அம்மாவிடம் சொல்லித்தான் இவ்வளவு விஷயமும் எனக்குத் தெரியும்” என்று தங்கராசு விவரித்தான்.
“மெட்ராசிலே வீடு வாங்கப் போறதாச் சொன்னா. அங்கேயே வசிக்கப் போறோம். இந்த ஊரு எங்களுக்குப் பிடிக்கலேன்னு சொன்னா...”.
“இங்கே உள்ள வீட்டையும் நிலத்தையும் வித்து அந்தப் பணத்தை வரப் பற்றணும்கிற நெனைப்பிலே தான், மெட்ராசிலே வீடு வாங்கிப் போடுவோம்னு அவன் சொல்லியிருப்பான். பணம் கிடைச்சதும் அவன் என்ன பண்ணுவானோ! அவன் என்ன பிசினஸ் பண்றான்னு யாருக்குத் தெரியுது? சரியான ஃப்ராடுப் பேர் வழியா இருந்தாலும் இருப்பான்”
“இருப்பான் இருப்பான்!” என்றான் முத்துமாலை. “எவனும் எப்படியும் இருந்துட்டுப் போறான். நம்ம பாதையிலே குறுக்கிடாமல் இருந்தால் சரிதான்” என்றும் கூறினான். பிறகு போனான்.
அதன் பிறகு வெகு நேரம் வரையில் முத்துமாலைக்கு திரிபுரசுந்தரியின் நினைப்பே உள்ளத்தை அலைக்கழித்தது.
—அப்படியானால் அவள் சந்தோஷமாக இல்லையா? அவள் புருஷன் குணங்கெட்ட குப்பானாக இருப்பான்