பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரு பெருந்தலைவர் யார் யார் இருக்கிருச்கள் ? எத்தனை பேர்கள் படிக்கிறார்கள்?’ என்பவை போன்ற கேள்விகளைக் கேட்டார். கம்பிரான் ஏற்ற விடை அளித்து வந்தார். தமிழ், வடமொழி, சங்கீதம் என்னும் மூன்றிலும் சிறந்த தேர்ச்சியுடைய வித்துவான்கள் அடிக்கடி மடத்துக்கு வந்து சம்மானம் பெற்றுச் செல்வார் களென்றும், ஆதீனத்தலைவரே சிறந்த கல்விமானென்றும், அவரிடத்திலும் சின்னப் பண்டாரசந்திகளிடத்திலும் பல மாணாக்கர்கள் தமிழ்ப் பாடம் கேட்டு வருகிறார்களென்றும் தெரிவித்தார்.

     இவ்வாறு தெரிவித்துக்கொண்டு வரும்போது அக்காலத்து மடத்துக்காரியஸ்தராய் இருந்தவரும், தம்பிசானுடன் வந்தவருமாகிய சிவசுப்பிரமணிய பிள்ளை யென்பவர், மடத்திலே படித்துக்கொண்டிருந்த மானக்கர்களுள் ஒருவராகிய சாமிநாதையர் என்பவரே இவ்வூர்க் கவர்ன்மெண்ட் காலேசில் தமிழ்ப் பண்டிதராய் இருக்கிருர்,என்று சொன்னார் 
                                                                         
     "அது கேட்ட முதலியார், அப்படியா! நான் அவரைப் பார்த்ததில்லை, என்றார்     

'பின்னும் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டுத் தம்பிரான் முதலியோர் விடை பெற்றுச் சென்று பூதி. சுப்பிரமணிய தேசிகரிடம் நிகழ்ந்தவற்றையெல்லாம் தெரிவித்தனர். உடனே ஆதீனத் தலைவர், 'இப்போது இங்கே முனிசிப்பாய் வந்திருக்கும் முதலியார் தமிழில் நல்ல பயிற்சி உடையவரென்று தோற்றுகிறது. அவரை நீங்கள் போய்ப் பார்த்து வர வேண்டும், என்று எனக்குச் சொல்லி அனுப்பினர்.