பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ இரு பெருந்தலைவர்

1886-ஆம் வருஷம் ஜூலை மாதத்தில் ஹிந்து பத்திரிகையில் ஒரு கடிதம் வெளி வந்தது. அதில் ‘சாமிநாதையர் சிந்தாமணியை உரையுடன் பதிப் பிப்பதாகத் தெரிகிறது. அது நச்சிர்ைக்கினியரது உரையாக இரு ங் த ல் தா ன் தமிழ் நாட்டினரால் ஏற்றுக்கொள்ளப்படும். சாமிநாதையர் உரையாக இருந்தால் பயன்படாது ' என்ற கருத்து இருந் தது. எழுதின வர் தம் பெயரை வெளியிடாமல் புனேபெயர் பூண்டிருந்தார். அது வரையில் பாராட் டுக்களேயே கேட்டு வந்த எனக்கு அக்கடிதம் சிறிது வருத்தத்தை உண்டாக்கிற்று. கச்சிர்ைக்கினியரது உரையோடு வெளியிடுவதாகத் தனிப் பிரசுரத்தால் தெரிவித்திருப்பதோடு அவ்வப்போது பத்திரிகை களிலும் அறிவித்து வருகிருேம். அப்படியிருக்க ஒன்றும் தெரியாதவர்போல இப்படி எழுதிவிட்டவர் ஏதோ கெட்ட நோக்கமுடையவராகத்தான் இருக்க வேண்டும், என்று ஊகித்துக்கொண்டேன். என் ஊகம் சரியே என்பது பிறகு தெரியவந்தது.

'அந்தக் கடிதத்திற்குப் பதில் எழுதுவது அவ சியமென்று நண்பர்கள் வற்புறுத்தினர்கள். நானே எழுதுவதைவிட வேறு தக்க ஒருவரைக் கொண்டு எழுதுவித்தல் ல .ெ ம ன் று தோற்றியபடியால் உடனே சென்னேயிலிருந்த இராமசுவாமி முதலி யாருக்கு ஒரு கடிதம் எழுதித் தெரிவித்தேன். அவர் சிறிதும் தாமதமின்றி, சீவக சிந்தாமணி மிகப் பழைய காவியம். அதைப் பல பிரதிகளேக்கொண்டு சோதித்து உழைத்து ஆராய்ந்து நச்சிர்ைக்கினியர் உரையுடனேதான் சாமிநாதையர் பதிப்பித்து வரு கிறார். அந்த நூல் வெளி வந்தால் தமிழ் நாட்டுக்கு மிக்க உபகாரமாக இருக்கும், என்னும் கருத்து