பக்கம்:இருளும் ஒளியும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடத் தெரியுமா? 13

வின் கடாட்சத்துக்குப் பாத்திரமானவள்தான்ே இந்தப் பெண் னும் வெகு அற்புதமாக வீணை வாசிக்கிருள். அகத்தின் அழகு முகத்தில் சுடர்விடாதா! அறிவுக் களே என்பது அலாதியானது அல்லவா! -

சந்துருவின் கண்களை ஸரஸ்வதியின் நீண்ட நயனங்கள் சந்தித்துப் பூமியை நோக்கித் தாழ்ந்தன. அவன் தன்னேயே விழுங்கிவிடுவதைப்போல் பார்ப்பதை அறிந்த ஸரஸ்வதி, "அத்தான்்! பெண்ணைச் சரியாகப் பார்த்துக்கொள்; பிறகு ஏதாவது குறை சொல்லாதே!' என்று கூறி, முறுவலித்தாள்.

சந்துரு சுய நிவுை வந்தவகைத் திரும்பிப் பார்த்தான்். சாவித்திரி, பெரியவர்கள் எல்லோருக்கும் நமஸ்காரம் செய்து விட்டு உட்கார்ந்தாள்.

'உம். . . . பெண்ணை நல்லதாக ஒரு பாட்டுப் பாடச் சொல்லுங்களேன், மாமி' என்ருள் ஸரஸ்வதி.

"எங்கள் வீட்டில் யாருக்குமே நன்ருகப் பாடத் தெரியாதே' என்று கூறினுள் சீதா, ஸரஸ்வதியைப் பார்த்து.

தெரியாது! சமைக்கத் தெரியாது. குடும்பம் நடத்தத் தெரியாது. பாடத் தெரியாது. பேசத் தெரியாது! இந்தத் "த்ெரியாது' என்கிற சொல் எவ்வளவு பரைக் காப்பாற்றுகிற்து. தெரியுமா? பாவம்! அவனுக்கு ஒன்றுமே தெரியாது!’ என்று பிறரை அநுதாபப்படச் செய்கிறதும் இந்தத் தெரியாது" என்கிற சொல்தான்்.

இந்த வீட்டில் யாரோ பாட்டுக் கற்றுக்கொள்ளுகிருர்கள். அதற்கு அத்தாட்சியாக அதோ தம்பூர் வைத்திருக்கிறது. ஏன் லார் ஒரு வேளை படித்துப் படித்து என்னத்தைப் புரட்டப் போகிருேம் என்று. நீங்கள் பாட்டுக் கற்றுக்கொள்கிறீர்களோ?' என்று கேலிப் புன்னகையுடன் ரகுபதி சந்துருவைப் பார்த்துக் கேட்டுவிட்டுச் சாவித்திரியைக் குறும்பாகப் பார்த்தான்்.

சாவித்திரி, கோபத்தால் முகம் சிவக்கச் சீதாவைப் பார்த் தாள். நாளெல்லாம் வள வளவென்று அரட்டை அடித்துக் கொண்டிருப்பாயே. இப்போது என்ன ஒரே பேசாமடந்தை ஆகி விட்டாய் நீ?" என்று கேட்பதுபோல் சாவித்திரி கோபக் கண் களால் தன் தங்கையைப் பார்த்தாள். ==

சீதா, அர்த்த புஷ்டியுடன் ஒரு சிரிப்புச் சிரித்தாள். அப்புறம் ரகுபதியின் பக்கம் திரும்பி, 'வீளுகச் சாவித்திரியின் பேரில் சந்தேகப்படாதீர்கள், நான்தான்் இந்த வீட்டில்