பக்கம்:இருளும் ஒளியும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

டில்லியிலிருந்து

கல்யாணத்திற்காக ராஜமையர் விசேவு ஏற்பாடுகள் எல்லாம் செய்திருந்தார். வீட்டைச் சுற்றி பெரிய கொட்டார ப் பந்தல் போட்டிருந்தது. விருந்தினர்கள் தங்குவதற்காகவும் சம்பந்தி வீட்டார் தங்குவதற்காகவும் இாண்டு விடுகள் வேறு வாடகைக்கு அமர்த்தினர். அந்த ஜில்லாவிலேயே கைதேர்ந்த சமையற்காரர்களே ஏற்பாடு செய்தார். சீர் வரிசைகளும், மற்ற ஏற்பாடுகளும் விமரிசையாகவே இருந்தன. 'இன்னுெரு பெண் இருக்கிருளே கொஞ்சம் நிதான்மாகத்தான்் செலவு செய்யுங் களேன்' என்று மங்களம் அடிக்கடி அவரிடம் சொல்லிக்கொண் டிருந்தாள்.

பிரபலமான நாதஸ்வர வித்வான வரவழைக்க அவர் ஏற் பாடு செய்திருந்தார். மாப்பிள்ளை ரகுபதிக்குச் சங்கீதம் என்றால் பிடித்தம் அதிகம் என்று சந்துரு அடிக்கடி சொல்லிக்கொண் டிருந்_ான். 'டாட்டுக் கச்சேரிக்கு நல்ல பாடகராக யாரையாவது அமர்த்தலாம்’ என்று ராஜமையர் கூறியபோது, சந்துரு அவரைத் தடுத்துவிட்டான். எங்கே ஸரஸ்வதியின் விளுகானத்தையும், தேனைப்போல் இனிக்கும் அவள் குரல் இனிமையையும் கேட்க முடியாமல் போய்விடுமோ என்கிற கவலேதான்் காரணமாக இருக்கவேண்டும். 'அந்தப் பெண்தான்் கொள்ளைப் பாட்டு பாடுகிருளே' என்று மங்களம்வேறு கூறிஞள்.

புடைவைகள் வாங்கும் பொறுப்பைச் சாவித்திரியின் இஷ்டப் படி விட்டுவிட்டார்கள். 'நம் ஜவுளி தினு சுகளே அறுநூறு ரூபாய்க்குமேல் போய்விட்டதே. இன்னும் மாப்பிள்ளைக்கு எடுக்கும் ஜவுளிகளையும் நீங்களே வாங்குவதாக ஒப்புக்கொண் டிருக்கிறீர்களாமே' என்று கவலையுடன் மங்களம் ஜவுளிக்கடைப் பட்டியலைப் பார்த்துக் கேட்டாள்.

பிரமாதம். . முதல் முதலில் குழந்தைக்குக் וירשcm 5. கல்யாணம் செய்கிருேம். விட்டுத் தள்ளு இதையெல்லாம்.

செலவைப் பார்த்தால் முடியுமா?' என்று ஒரே வார்த்தையில் பதில் கூறி முடித்துவிட்டார் ராஜமையர்.