பக்கம்:இருளும் ஒளியும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fo ல் லியிலி ருக்கு 25.

க: வாங்கிவிட்டு மிகுதிப் பணத்தைப் பயனுள்ளதாகச் செல வழித்தால் எவ்வளவோ நன்ருக இருக்கும். நாலு பேர் மெச்சிப் புகழவேண்டும் என்பதற்காகவே பணத்தை இப்படி விரயம் செய்யவேண்டி இருக்கிறது' என்ருள் மங்களம்.

என்னதான்் பனம் காசு இருந்தாலும் நம் கல்யானைத்தின் போதெல்லாம் இந்த மாதிரி டாம்பீகச் செலவு குறைவாகத்

தான்் இருந்தது; இல்லையா மன்னி? இப்படிக் கண்டபடி பணத்தை வாரி இறைக்கிரு.ர்கள். சாப்பாட்டுப் பண்டங்களை அ ஆக வைத்தும், ஊச வைத்தும் குப்பையிலே கொட்டு

கிரும்கள். டில்லியில் ஒரு கல்யாணம் நடந்தது. த டபுடலாக ஒரே வைபவமாகத்தான்் நடத்தினர்கள். வந்தவர்கள் வந்த படி இருந்தார்கள். ஆனல் அந்தக் கல்யாணத்துக்காக இரவு பகலாக உழைத்த வேலைக்காரர்களுக்கு நிறுத்துத்தான்் சாப்பாடு போட்டார்களாம். பலகாரங்களைப் பூட்டிவைத்து ஊசிப்போன பிறகு எடுத்துக் கொடுத்தார்களாம்! எப்படி இருக்கிறது விஷயம்' என்று ஆத்திரத்துடன் பேசிளுள் பாலம்.

'அத்தை, டில்லிக்குப் போன பிறகு நன்ருகப் பேசக் கற்றுக் கொண்டு இருக்கிருள். அடிக்கடி சட்டசபை கூட்டங்களுக்குப் போவாயாமே, அத்தை!' என்று கேலி செய்தாள் சாவித்திரி.

என்னவெல்லாமோ பேசிக்கொண் டிருக்கிறேனே, முக்கிய மான விஷயத்தை மறந்துவிட்டு. ஏண்டி சாவித்திரி! உனக்கு வரப்போகிற ஆத்துக்காரர் எப்படி இருக்கிருர்? சிவப்பா, கறுப்பா' என்று சாவித்திரியைப் பார்த்துக் கேட்டாள் பாலம்.

'போ அத்தை! நான் சரியாகக் கவனிக்கவில்லை' என்று வெட்கத்துடன் கூறினுள் சாவித்திரி. o

'பொய்யைப் பார் பொய்யை! இவள் மனசில்தான்் என்ன இருக்கிறதோ? கேட்டுக்கொள் அத்தை. மாப்பிள்ளைக்குப் பாட்டு என்றால் ஆசையாம். இவளே அவர் பாடச்சொன்ன போது இவள் அவரை விழித்துப் பார்த்தாளே? அப்பொழுது அவர் சிவப்பா, கறுப்பா என்று தெரியவில்லையாமா இவளுக்கு?' என்று கேட்டுச் சீதா, சாவித்திரியை மேலே பேசவிடாமல் தடுத்

தாள். **

"இந்த வாயாடியுடன் என்ன பேச்சு வேண்டி இருக்கிறது?" என்று கூறிவிட்டு சாவித்திரி 'சடக் கென்று எழுந்து அப்பால் சென்ருள்.