பக்கம்:இருளும் ஒளியும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகா வின் உபதேசம் i

முறைகள் சொல் வி இரு ப்பேன் சீதா?' ' என்று மகனே க் கோபித்துக் கொண்டாள்.

'இதோ வந்துவிட்டேன் அம்மா' என்று கூறி காமரா அறைக்குள் சென்று கையில் கடிதமு. உரை யும் அவள் எடுத் து: வந்தபோது தெருவில் வண்டி வந்து நின்றது. கையில் ஒரு சிறு பெட்டியை எடுத்துக்கொண்டு சாவித்தி மட்டும் இறங்கி உள்ளே வந்தாள். அடுத்தாற்போல் மாப்பிள்ளே ரகுபதி வருவான் என்று எல்லோரும் வாசற் பக்கத்தையே சிறிது நேரம் பார்த்துக்கொண் டிருந்தார்கள். வண்டிக்காரன் காலி வண்டி யைத் திருப்பிக்கொண்டு போன பிறகுதான்் சாவித்திரி மட்டும் தனியாக வந்திருக்கிருள் என்பது தெரிந்தது.

என்னம்மா இது? நீ மாத்திரம் தனியாகவா வருகிருய்? என்று ஆச்சரியத்துடன் மகளைப் பார்த்துக் கேட்டார் ராஜமையா.

'இது என்னடி அதிசயம் ஒரு கடுதாசி போட்டிருந்தால் இங்கேயிருந்து யாராவது வந்து அழைத்து வந்திருக்க மாட் டோமா?' என்று பாட்டி அதிசயம் தாங்காமல் கேட்டுவிட்டுப் பேத்தியைப் பார்த்தாள்.

சாவித்திரி பதில் எதுவும் கூருமல் காமரா அறைக்குள் சென்று பெட்டியை வைத்துவிட்டு அவளைத் தொடர்ந்து அறைக்குள் நுழைந்த மங்களத்தின் தோளில் தலையைச் சாய்த்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். அப்புறம் மாமியார் வீட்டில் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களைச் சாவித்திரி தாயிடம் கூறவும், அது வீடு முழுவதும் பரவுவதற்குச் சில நிமிஷங்கள் கூடப் பிடிக்கவில்லை.

'அடிக்கிறதாவது? ஹாம். . பதினெட்டு வயசு வரையில் வளர்த்துக் கொடுத்தால் அடிக்கிறதாவது? ஹ-ம். என்று ராஜமையர் திருப்பித் திருப்பித் தாம் சொன்ன வார்த்தை. களேயே சொல்லிக்கொண் டிருந்தார்.

'அடிப்பார்கள். நாளைக்கு இவளை வேண்டாம் என்று தள்ளியும் வைப்பார்கள். வீட்டிலேதான்் பெண் குதிர் மாதிரி வளர்கிறதே!' என்று பாட்டி. சம்பந்தம் இல்லாமல் பேச. ஆரம்பித்தபோது சந்துரு திடுக்கிட்டான். 'ஸரஸ்வதியைக். குறித்தா இவ்வளவு கேவலமாகப் பேசுகிருள் பாட்டி? ரகுபதி ஒரு கல்யாணம் பண்ணிக்கொண்டு, அந்த மனைவியைத் தள்ளி வைத்த பிறகு தன்னை மணக்கவேண்டும் என்று விரும்புகிற: