பக்கம்:இருளும் ஒளியும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 S)

நந்தகோபாலைேடு நான் '

வரஸ்வதியின் இன்னிசைக் கச்சேரியின் அரங்கேற்றத்துடன் திறப்புவிழா இனிது முடிந்தது. சாவித்திரி வராமலேயே வைபவம் குறைவில்லாமல் நடந்துவிட்டது. அன்று காலேவரை யில் தெருவில் போகிற வண்டியைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போளுள் ஸ்வர்ணம்! ஊரில் தெரிந்தவர்கள் கேட் பதற்குப் பதில் சொல்லியே அவளுக்குச் சலித்துப்போய்விட்டது. முதல் நாள் அலமு, ஒன்றுக்குப் பத்தாகச் சொல்லிய செய்திகள் வேறு அவள் மனத்தை அரித்தன.

'நீதான்் ஒருத்தருக்கும் ஒன்றும் தெரியாது என்று முடி மூடி வைத்திருக்கிருய். உன் நாட்டுப்பெண்ணின் பாட்டி இருக்கிருளே, அவள், நாம்தான்் அவள் பேத்தியைப் பாடாய்ப் படுத்தி வைக்கிருேம் என்று தம்பட்டம் அடித்து வருகிருள். அதற்கு என்ன பண்ணப்போகிருய் மன்னி' என்று அலமு ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டாள்.

ஸ்வர்ணத்துக்கு வியப்பும், கோபமும் ஒருங்கே ஏற் பட்டன. புருஷனுக்கும். மனைவிக்கும். ஏதோ சில்லறை மனஸ் தாபத்தால் பிறந்தகம் போயிருக்கும் பெண் கிளப்பிவிட்டிருக்கும் வதந்தி எவ்வளவு அபாண்டமாக இருக்கிறது? சாவித்திரியிடம் நான் எவ்வளவு அன்புடன் இருந்தேன்? இரண்டு வேளை களிலும் தலைவாரிப் பின்னிப் பூச் சூட்டுகிறதும், பரிந்து பரிந்து சாதம் போடுகிறதுமாக இருந்தவளையே எப்படித் துாற்றிவிட்டாள் பார்த்தாயா?" என்று நினைத்து நினைத்து வருந்திளுள்

இi T LD.

என்ன அப மா அப்படியே அசந்து நின்றுவிட்டாய்? சொல்லிவிட்டுப் போகட்டும் போ' என்று ரகுபதி தாய்க்கு ஆறுதல் கூறினன்.

தங்கமும், ஸ்ரஸ்வதியும் விழாவில் குது.ாகலத்துடன் பங்கெடுத்துக்கொண்டார்கள். எப்படிக் கூப்பிடுவது? என்ன உறவு என்று சொல்வது என்று கவனியாமல் தங்கம், ஸரஸ்வதி