பக்கம்:இரு விலங்கு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல வேட்கை

119


கொள்கிருன். அதுதான் வள்ளி நாயகியைத் திருமணம் செய்துகொண்ட திருவிளையாடலின் உண்மை. இந்தத் தத்துவத்தைப் பலமுறை முன்னலே நாம் பார்த்திருக் கிருேம்.

வள்ளிநாயகி தினேப்புனத்தில் ஆலோலம் பாடிக் கொண்டிருந்தாள். தினக்கதிர் முற்றி வந்தால் கிளிகள் வந்து கொத்தும். அந்தக் கிளிகளே ஒட்டுவதற்கு அவள் பாடுகிருள். ஆளுல் என்ன ஆச்சரியம்: கிளிகள் பின்னும் அதிகமாக வருகின்றன. காரணம் என்ன தெரியுமா! அவள் பேசுகின்ற பேச்சும், பாடுகின்ற பாட்டும் கிளியின் குரலேப் போல இருக்கின்றன. அங்கே நம்முடைய இனம் இருக்கிறதென்ற எண்ணத்தில் அந்தப் பாட்டைக் கேட்டுக் கிளிகள் வந்து கூடுகின்றன. அவள் நிறத்தாலும் குரலாலும் கிளியைப் போல இருக்கிருள். தினேப் புனத் தில் கதிர்கள் நிறைந்து நிற்க, அதற்கு இடையில் அவள் நிற்பதால் பெரியகிளி அமர்ந்திருப்பது போலத் தோற்று கிறது. சில சமயங்களில் அவளே முற்றியிருந்த தினைக் கதிரை எடுத்துக் கையிலே நிமிண்டி உமியை ஊதி விட்டுத் தெள்ளித் தின்கிருள். அதை மாவாக்கித் தேனும் கலந்து உண்ணுகிருள்: பிறரையும் உண்பிக்கிருள்.

வண்ணத் தினமாவைத் தெள்ளியே-உண்னும்

வாழ்க்கைக் குறக்குல வள்ளியே’’ என்று காவடிச் சிந்தில் அண்ணுமக்ல ரெட்டியார் பாடுகிருர், தின விளகின்ற கொல்லேயில் கிளியைப் போல எம்பெருமாட்டி வீற்றிருக்கிருள்,

தெள்ளிய ஏனலில் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும்

பெள்ளி நாயகியைக் கள்ளச் சிறுமியென்று கூறுகிருச் - அருணகிரியார். மலேப்பகுதியிலே வாழ்கிறவர்கள் குற வர்கள். குறவர்கள் திருடும் தொழில் உடையவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/141&oldid=1402685" இலிருந்து மீள்விக்கப்பட்டது