பக்கம்:இரு விலங்கு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல வேட்கை

123

 வாய்ந்தது. ஆகையால் நாம் செய்யவேண்டியது, அதனப் பெறவேண்டுமென்ற ஆர்வத்தை வளர்த்துக் கொள்வது ஒன்றுதான். அந்த வேட்கை மீதுார மீதுார ஆண்டவன் தன்னுடைய திருவடியை நமக்குக் கொடுக்க வேண்டு மென்று ஓடி வருவான். இவ்ற்றை யெல்லாம் எண்ணி, -

தெள்ளிய ஏனலிற் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும் வள்ளியை வேட்டவன் தாள் வேட்டில

என்று சொன்னர் அந்தக் குற வள்ளியை வேட்டு,

"சுனையோடு, அருவித் துறையோடு, பசுந்: - தினையோடு, இதளுேடு"

திரிந்த திருத்தாள் அல்லவா அது? ஆதலின் நீ விண்ணப் பம் மாத்திரம் போட்டு வைத்தால் அது உன்னே நாடிக் கொண்டு வரும் என்ற குறிப்போடு அதனைச் சொல்கிருர்

★ தெள்ளிய ஏனலில் கிள்ளையைக் கள்ளச் சிறுமிஎனும் வள்ளியை வேட்டவன் தாள்வேட் டிலைசிறு வள்ளைத்தள்ளித் துள்ளிய கெண்டையைத் தொண்டையைத் தோதகச் சொல்லை நல்ல வெள்ளிய நித்தில வித்தார மூரலை வேட்ட நெஞ்சே.

தெள்ளி யுண்ணும் தின வளரும் கொல்லையில் கிளி போல இருந்து காவல் செய்தவளும் கள்ளமுடைய குறக் குலச் சிறுமி என்று சுட்டும்வண்ணம் இருந்தவளுமாகிய வள்ளி நாயகியை விரும்பி வலிந்து சென்று திருமணம் புரிந்து கொண்ட முருகனுடைய திருவடியை விரும்பாமல் இருக்கிருயே! சிறிய வள்ளையிலையைப் போன்ற காதை மோதித் துள்ளுகின்ற கெண்டையைப் போன்ற மாதர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/145&oldid=1402687" இலிருந்து மீள்விக்கப்பட்டது