பக்கம்:இரு விலங்கு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாலாயிரம் கண்

23


சொல்வது உண்டு. ஆகவே கண்களால் பார்ப்பதற்குச் சிறந்தவை என்று பல பொருள்கள் உண்டு. அவற்றுள் மிகச்சிறந்தது ஆண்டவனுடைய திருவுருவம். இறைவன் தனக்கென்று உருவமும், குணமும் இல்லாதவன். ஆனால் அவன் ஆருயிர்களைக் காப்பாற்றவேண்டுமென்ற பெரும் கருணை உடையவன். அவர்களை எல்லாம் இங்கு அகற்றி நல்ல நிலையில் வைக்கவேண்டுமென்ற கருணை அவனுக்கு இருக்கிறது. அவனோடு நாம் தொடர்பு வை த் து க் கொள்ள வேண்டுமானால் அவன் நம் கண்ணுக்குப் புலனா காமல் அறிவுக்குப் புலனாகாமல் இருந்தால் இயலாது. ஆதலின் நமக்கு அருள் செய்ய வேண்டித் திவ்யமங்கள உருவம் படைத்து எழுந்தருளுகிறான். மிகச் சி ற ந் த அன்பர்களுடைய உள்ளத்திலே தன்னுடைய திருவுருத் தைத் தோற்றுவிக்கிறான். அருள் கண்ணால் பார்க்கின்ற அந்தப் பெரியவர்கள் தாம் கண்டவற்றை மற்றவர்களுக் குச் சொல்கிறார்கள்.

குறியும் குணமும்

 கமங்களும் சாத்திரங்களும் அந்தப் பெருமானு டைய திருவுருவத்தைச் சொல்கின்றன. அவற்றையெல் லாம் வைத்துக்கொண்டு இறைவனுடைய திருக்கோலங் களைக் கல்லாலும், செம்பாலும் செய்துவைத்துக் கோயி லில் பூசிக்கிறார்கள். மந்திரங்களால் அவற்றுக்குத் தெய் வத் தன்மையை ஏற்றுகிறார்கள். பலவகை வ ழி பா டு களைச் செய்கிறார்கள். மூல மூர்த்தியோடு பல்வேறு மூர்த்திகளையும் திருவிழாவுக்குரிய உற்சவ மூர்த்திகளாக அமைக்கிறார்கள். மனிதன் கண்ணுடையவனாக இருப்ப தால் அந்தக் கண்ணால் காண்பதற்காக இத்தனை கோலங் களையும் அமைத்திருக்கிறார்கள். தனக்கென்று கு ண ம் இல்லாத ஆண்டவன் மூன்று குணங்களின் வசப்பட்ட ஆத்மாக்களைக் காப்பாற்றவேண்டி எட்டுக் குணங்களை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/45&oldid=1402460" இலிருந்து மீள்விக்கப்பட்டது