பக்கம்:இரு விலங்கு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாலாயிரம் கண்

29


களாகிய தேவர்களாவது சிதையைப் பார்த்துத் திருப்தி அடைந்தார்களா? அவர்களுக்கும் ஒரு குறை இருந்தது. அவர்கள் தம்முடைய இமையா நாட்டத்தை உடைய கண்ணால் சீதையைக் கண்டார்கள் என்பது உ ண் மை. ஆனால், "இந்தப் பேரழகைக் கா ண் ப த ற் கு நமக்கு ஆயிரம் கண் இல்லையே!" என்று ஒரு குறையைச் சொல் வலிக் கொண்டார்களாம். இரண்டு வகையினரும் தம் குறையை உணரச் செய்தது அந்தப் பேரழகு.

   "உமையா ளொக்கும் மங்கையர் உச்சிக் கரம்வைக்கும்
    கமையாள் மேனி கண்டவர் காட்சிக் கரைகாணார் 
    இமையா நாட்டம் பெற்றில மென்றார்; இருகண்ணால் 
    அமையா தென்றார் அந்தர வானத் தவரெல்லாம்." 

அப்படியே இங்கே அருணகிரியார்,

நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே

என்று சொன்னார். எதற்காக நாலாயிரம் கண்கள் வேண்டும்? தாம் பார்க்கும் பொருளின் பெருமைகளை அடுக்குகிறார். "இவ்வளவு சிறந்த பொருளைக் காண் பதற்கு எனக்கு வாய்ப்பு இருந்தது. நான் கண்டேன். ஆனால் அங்கே என்னிடத்தில் இருந்த கருவி சிறியது என் பதைக் கண்டு கொண்டு வருந்தினேன்" எ ன் ப து போலச் சொல்கிறார். சிறிய செம்பைக் கொண்டு போன கணவன் பெரிய அண்டாவைத் தன் மனவி கொடுத்து அனுப்பாது போனளே என்று இரங்கினானே, அது போல இருகிறது அல்லவா? இனி, செங்கோட்டுப் பெரு மானை அவர் எப்படிச் சொல்கிறார் என்று பார்க்கலாம்.

மாலோன் மருகன்

 செங்கோடன் பேரழகு உடையவன். அவனுக்கு எத்தனையோ பெருமை இருக்கிறது. இருந்தும் எடுத்த வுடன், 

மாலோன் மருகனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/51&oldid=1402466" இலிருந்து மீள்விக்கப்பட்டது