இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சா ல ந ன் று
திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருக்கும் முருக னுடைய பேரழகைக் கண்டு அதில் ஈடுபட்ட அருணகிரி நாதர்,
"நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே"
என்று சென்ற பாட்டில் குறைப்பட்டுக்கொண்டதைக் கண்டோம்; இன்னும் அவருக்குத் திருச்செங்கோட்டின் நினைவு போகவில்லை. தொடர்ந்து அங்குள்ள பெரு மானையே நினைக்கிறார். நாலாயிரம் கண் இல்லை என்பதற் காக அவனுடைய அழகைக் காணாது வந்துவிடுவாரா? கிடைத்ததைக் கொண்டு முழுப் பயன் பெறுவதுதான் அறிவாளியின் இயற்கை. ஆதலின் செங்கோடனை நன்றா கக் கண்டு இன்புற்றார் அவனுடைய திருவுருவம் அவரது உள்ளத்தில் பதிந்தது.
நினைத்தல்
நமக்கும் இறைவனைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆவல் இருக்கிறது. ஏதேனும் ஒரு தலத்திற்குச் செல்கிரறோம். சென்று அவனைக் காண்கிரறோம். அவனுடைய அற்புத மான கோலத்தில் மனத்தை ஈடுபடுத்துகிரறோம். உலக வாழ்வில் பல முயற்சிகளைக் கவனிக்கவேண்டி இருப்பத னால் எப்போதுமே அவனுடைய திருச்சந்நிதானத்தில் இருக்க நம்மால் முடியாது. ஆதலின் கோயிலுக்குக் குறிப் பிட்ட நேரங்களில் சென்று தரிசித்துவருவதே பக்தர்களு டைய வழக்கமாக இருக்கிறது. ஆனாலும் அப்படித் தரி சித்த பெருமானை நாம்எப்போதுவேண்டுமானலும்,எந்த