பக்கம்:இரு விலங்கு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சால நன்று

45


ஆகையால் அது திருட்டு ஆயிற்று. அப்போது வள்ளி நாயகியை எப்படியாவது அடைய வேண்டுமென்ற வியா கூலம் அவனுக்கு இருந்ததாம்.

    "வேடுவர் புனத்திலுரு மாறிமுனி சொற்படி 
     
     வியாகுல மனத்தினொடு போம்விற்காரனும்"

என்று திருவகுப்பில் வருகிறது. நாரதர் கூறிய சொற் படியே வள்ளி நாயகியை அடையவேண்டும் என்ற வியா கூல மனத்தோடு உருமாறிப் போனானாம். வள்ளி நாயகி யை ஆட்கொள்வதற்காகச் செய்த திருவிளையாடல் இது. அந்தப் பிராட்டிக்கு முருகனை அடையவேண்டு மென்ற காதல் இருந்திருக்கலாம். அது வெளிப்படையாகத் தெரியவில்லை. அவளே ஆட்கொள்ள வேண்டுமென்ற கவலை மிகுதியாக முருகனுக்கு இருந்தது. முருகனுடைய பெருங் கருணையை இந்தத் திருவிளையாடல் காட்டுகிற தென்பதைப் பலமுறை பார்த்திருக்கிறோம். இறைவனே வலிய வந்து தன்னை ஆட்கொள்ளும் பேறு வள்ளியம் பெருமாட்டிக்குக் கிடைத்தது.

குரங்கும் பூனையும்

 குரங்குக்கும் பூனைக்கும் ஒரு வகையில் வித்தியாசம் 

உண்டு. குரங்கு தன் குட்டியைப் பற்றிக்கொள்ளாது. குட்டியே தாய்க் குரங்கைப் பற்றிக்கொள்ள வேண்டும். மரத்திற்கு மரம் தாய் தாவும்போது குட்டி சிறிதும் சோர் வில்லாமல் தாயைப் பற்றிக்கொண் டிருக்கும். பற்றிக் கொள்ளாமல் பிடியை விட்டுவிட்டால் அந்தக் குட்டி யையே கொன்றுவிடும் என்று சொல்வார்கள் . ஆனால் பூனையோ அப்படி அன்று. பூனைக் குட்டிக்குக் கவலை சிறிதும் கிடையாது. தாய் எங்கே போனாலும் தன்னு டைய குட்டியைத் தன் வாயில் கெளவிக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/67&oldid=1402473" இலிருந்து மீள்விக்கப்பட்டது