பக்கம்:இரு விலங்கு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சால நன்று

55


மாமரங்களும் இணைந்து பொழிலாக நிறைந்திருக்கிற திருச்செங்கோட்டில் அவன் எழுந்தருளியிருக்கிறான். அவனை வாழ்த்துவது மிகவும் நல்லது.

                                       கன்னிப் பூகமுடன்
 தருமா மருவு செங்கோடனை வாழ்த்துகை சால நன்றே,
 'நாலாயிரம் கண் படைத்திலனே என்று நான் இரங் கினேனே! அப்படி இரங்கி என்ன பயன்? இருப்பதைக் கொண்டு திருப்தியுறலாமே. கண்கள் பல இல்லா விட்டாலும் எங்கே சென்றாலும், எல்லாக் காலத்திலும் அவன் புகழை வாழ்த்தலாமே. ஒரு வாயாக இருந்தாலும் அவன் புகழ் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் மெல்ல மெல்லச்சொல்லலாம்.நிறையச்சொல்வதற்கு ஏற்ற கருவி வாய். ஆகையால் அது இல்லையே, இது இல்லேயே என்று குறை படுவதைவிட நமக்குள்ள ஒன்றைக் கொண்டு பெரும் பயன் ஈட்டலாம்' என்று சமாதானம் செய்து கொள்வாரைப் போல இந்தப் பாட்டைப் பாடுகிறார்.
  கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு
  வரும்ஆ குலவனைச் சேவல்கைக் கோளனை வானம்உ ய்யப் 
  பொருமா வினைச்செற்ற போர்வே லனைக்கன்னிப் பூகமுடன் 
  தருமா மருவுசெங் கோடனை வாழ்த்துகை சாலநன்றே. 

நயம்

 ந்தப் பாட்டில் ஒரு நயம் இருக்கிறது. தமிழில் சொற்களைக் கொண்டு சில வகையான நயங்களைப் புலவர் கள் காட்டுவார்கள். பொருளின் அருமைப்பாட்டைப் பொருள் நயம் என்றும், சொற்களின் அருமையைச் சொல் நயம் என்றும் சொல்வது வழக்கம். பொருளாலும் சொல்லாலும் பெரும்புலவர்கள் தம்முடைய பாடல்களின் சுவையை மிகுதியாகும்படி செய்வார்கள். இந்த பாட் டில் சொல் நயம் ஒன்று அமைந்திருக்கிறது. மேலாகப்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/77&oldid=1402478" இலிருந்து மீள்விக்கப்பட்டது