தண்டையம் புண்டரிகம்
67
தண்டையம் புண்டரிகம் ტჭ
மென்று சிலர் சொல்வார்கள். ஆனல் எம்பெருமானு டைய திருத்தொண்டைச் செய்வதே தம்முடைய செய லாக வாழ்கின்ற பக்தர்களுக்கு இறைவனுடைய திரு வடியே ஞானமாக வந்து அமையும், மனம், வாக்கு, காயம் என்னும் மூன்று கரணங்களிலுைம் அவனுக்குத் தொண்டு புரிபவர்கள் தொண்டர்கள். ம ன த் த ர ல் அவனேத் தியானித்து, வாயில்ை அவன் திருப்புகழை ஒதி, உடம்பினுல் அவன் திருக்கோயிலை வலம் செய்து வாழ்க்கை நடத்துகிறவர்கள் அவர்கள். அவர்கள் அங் கங்கள் எல்லாம் பயன்படும்படி ஆண்டவன் அங்கங்களே
மேற்கொண்டு வருகிருன். அவர்கள் கண் காணத் திரு
வுருவத்தை எடுத்துக்கொண்டு வருகிருன். கோயில் களிலுள்ள மூர்த்தியாக அவன் எழுந்தருளியிருக்கிருன். அந்தக் கோயிலைச் சென்று அடைந்து அவனுடைய திரு வுருவத்தை ஆசையோடு காண்கிருர்கள் தொண்டர்கள். அப்படிக் காணும் திருவுருவத்தில் அவர்கள் மிக்க காத லோடு காணுகின்ற பகுதி அவனுடைய திருவடி அதைக் கண்டு கண்டு மெல்ல மெல்ல நெருங்குகிரு.ர்கள்.
நெடுந்துாரத்திலே முருகப் பெருமானுடைய திரு. வுருவப் பேரெழிலக் கண்டு, பின்பு அவனே அணுகி, அவனுடைய திருவடியை நன்கு கண்டு மொள்ளு கிருர்கள்; அதன் எழிலே மொண்டு இன்புறுகிருர்கள்; அநுபவத்தைப் பெறுகிரு.ர்கள் கண் காண்பதற்கும், ஆவல் அண்டுவதற்கும், கருத்து மொள்ளுவதற்கும், உயிர் உண்பதற்கும் கருவியாக விளங்குகின்றன. நாம் ஆண்டவனுடைய கோயிலுக்குச் சென்று காணும் அளவில் நிற்கிருேம். நெருங்குவது இல்லை. உடம்பினுல் நெருங்குவது அன்று: மனத்தில்ை நெருங்குவது ஒரு பொருளை நாம் நெருங்கிவிட்டால் அதையன்றி வேறு. எதனிடமும் சாரமாட்டோம் வேறு ஒன். Graff