பக்கம்:இரு விலங்கு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இரு விலங்கு


செல்லாது காணுவது முதல் படி. அணுகுவது இரண் டாவது படி, இலேயில் உட்காராமல் சுற்றிக்கொண் டிருந்தால் அதில் உள்ள உணவை உண்ண முடியாது. அந்த இலக்கு அருகில் உட்கார வேண்டும்,

இறைவன் திருவடியைக் கண்டு மகிழ்வது வேறு: அண்டி மகிழ்வது வேறு. மற்றவற்றையெல்லாம் மறந்து அந்தத் திருவடியின் பேரெழிலில் மனத்தை லயிக்க விட்டுப் பிறிதொன்றையும் காணுத நிலையில் நிற்பது தான் அண்டி நிற்றல். பின்பு அதனே மொண்டு நிற்க வேண்டும். மொள்ளுவது என்ருல் எந்தப் பொரு ளால் மொள்ளுகிருேமோ அது நிரம்புவது, கண்ணும் கருத்தும் நிரம்பும்படியாக நம்முடைய பக்தி இருந்தால் அப்போது மொண்டவர்கள் ஆவோம். குடத்திலே பொய்கை நீரை எடுத்து விடுவது வேறு குடத்தில்ை பொய்கையில் உள்ள நீரை மொள்ளுவது வேறு. குடத் தில் நீரை விட்டால் குடம் நிரம்பியும் இருக்கலாம்; அரை குறையாகவும் இருக்கலாம் மொண்டால் நிச்சயமாகக் குடம் நிரம்பிவிடும். அப்படி இறைவனுடைய திருவடிப் பேரெழிலில் கண்ணேயும் கருத்தையும் மூழ்க அடிக்க வேண்டும். வேறு ஒன்றுக்கும் அவற்றில் இடம் இருக்கக் கூடாது. அந்தப் பெருமானுடைய திருவடியை மொண்ட பிறகு அநுபவம் உண்டாகும். கண்ணிேைல கண்டு, கருத்திருலே உணர்வதல்ை அந்த அதுபவம் ஏற்படும்,

சுந்தரர் அநுபவம்

சுந்தரமூர்த்தி காயகுருக்கு இறைவனுடைய காட்சி யைக் கண்டவுடன் பேரானந்தப் பெருக்கு விளந்ததாம்.

அந்த நாயனர் தில்லையில் திருக்கூத்தாடும் நடராசப் பெருமானத் தரிசித்தார் கண்ணுலே கண்டு அண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/90&oldid=1283943" இலிருந்து மீள்விக்கப்பட்டது