பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சீமாட்டி காதலின்

27


மூன்று நாள்கள் கழிந்தன; அவள் வெளியில் வரவேயில்லை, எவரையும் அழைக்கவுமில்லை.

கதவைத் திறந்து பார்த்த பொழுது, அவள் சோகத்தால் மரணமடைந்து விறைத்துக் கிடந்தாள்!

ஆனால், அவளுடைய ஆன்ம விக்கிரயப் பத்திரம் செல்லாது என்று ஆண்டவன் முடிவு செய்துவிட்டான். தர்மத்திலே தலைசிறந்த அவளுடைய ஆன்மா, ஆயிரக்கணக்கான ஆன்மாக்களை முடிவில்லாத மரணத்திலிருந்து காப்பாற்றிய அந்தப் பரிசுத்த ஆன்மா சயித்தானுக்குச் சொந்தமில்லையென்பது ஆண்டவன் தீர்ப்பு.

மேலே குறித்த எட்டு நாள்களும் கழிந்த பிறகு கப்பல்களில் ஏராளமான உணவுப்பொருள்கள் நாட்டிலே வந்து குவிந்தன. பசியும் பட்டினியும் மறைந்துவிட்டன. சத்திரத்திலே தங்கியிருந்த இரு வணிகர்களும் தங்கள் கடையைக் கட்டிக்கொண்டு எங்கே சென்றார்கள் என்பது தெரியவில்லை.