பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூத்திரம்-க-1) இறையனார் அகப்பொருள் 109: இங்கனமுஞ் சொல்லும்; அதற்குச் செய்யுள் : 'உலம்புனை தோள் மன்னர் ஓடவல் லத்தட் டவருரிமை நலம்புனை கோதையர் அல்லல் கண் டான்கொல்லிச் சாரல்கண்ணி வலம்புனை வில்லோ டிருவிப் புனங்கண்டு வாடி நின்றால் சிலம்பனை தையற்க என்னுங்கொல் வேங்கைச் செழும்பொழிலே.' இவ்வா றுஞ் சொல்லும்; அதற்குச் செய்யுள் : 'பொருங்கண்ணி சூடிவந் தார்படப் பூலந்தைப் பொன்முடிமேல் இருங்கண்ணி வாகை அணிந்த எங் கோன்கொல்லி ஈர்ஞ்சிலம்பிற் கருங்கண்ணி காக்கின்ற பைம்புனங் கால்கொய்ய நாளுரைத்த (தே.' பெருங்கண்ணி யாரைப்பொன் வேங்கையென் றோ இன்னும் பேசுவ இங்ஙனமுஞ் சொல்லும்; அதற்குச் செய்யுள் : 'பைங்கின்ற ஆடா வேரல்கு லாள் செல்ல நாட்பணித்த இந்தின்ற வேங்கை குறையா திளஞ்சந்தனங்குறைத்தார் மெய்ந்நின்ற செங்கோல்'விசய சரிதன்விண் தோய்பொதியின் மைந்நின்ற சாரல் வரையக வாணர் மடவியரே.', (கரு) இவ்வகை செறிப்பறிவுறுக்கப்பட்ட தலைவன் தெருள் வானாயின், ' இன்ன நாள் வரைவல், அத்துணையும் இவளை ஆற்றிக்கொண்டிரு, நினக்கு அடைக்கலம்' எனக் கைப்பற்றும்; கைப்பற்ற, அதனைத் தோழி சூளுறவாகக் கருதினாள். உலகத் துச் சூளுறுவார், பார்ப்பாரையும் பசுவையும் பெண்டிரையும் தொட்டுச் சூளுறுபவாகலான், சூளுற்றானென்பதனை நினைந்து, ‘நீர் வரைவல் என்றதே அமையாதோ? சூளுறவேண்டுமோ? பொய்த்ததும் வாய்த்ததும் உடையாரன்றே சூளுறுவார் ? மெய் யல்லது சொல்லா தார்க்குச் சூளுறவு வேண்டுமோ? நின்கண் ணும் பொய்யுண்டாகின், மெய்யென்பது இவ்வுலகத்து நிலை . பெற்றவழி இல்லையாகாதே' என்னும்; அதற்குச் செய்யுள் : சூளுறூஉந் தோன்றற்குத் தோழிகூறல் 'நெய்யொன்று வேல்நெடு மாறன்தென் னாடன்ன நேரிழையிம் மையொன்று வாட்கண் மடந்தை திறத்திட் டறந் திரிந்து பொய்யொன்று நின்கண் நிகழுமென் றாற்பின்னைப் பூஞ்சிலம்பா மெய்யொன்றும் இன்றி ஒழியுங்கொல் லோவிவ் வியலிடத்தே.' ' திரைப்பால் இரும்புனற் சேவூர் எதிர்நின்ற சேரலர்கோன் வரைப்பால் அடையச்சொற் றான்வையை அன்னாள் திறத்துவண்டார் விரைப்பால் நறுங்கண்ணி யாய்பொய்ம்மை நீசொல்லின் மெய்ம்மை துரைப்பார் பிறரினி யாவர்கொல் லோ இவ் வுலகினுள்ளே.' (யென்ப. (பாடம்) 1. வினயச் சரத்தன்விண்.