சூத்திரம்-க]
இறையனார் அகப்பொருள்
3
நூற்பெயரும், யாப்பும், நுதலிய பொருளும், கேட்போரும், பயனும் என இவை.
என்னை,
- "ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை
- நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
- கேட்போர் பயனோ டாயெண் பொருளும்
- வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே"
என்றாராகலின்.
இவற்றொடு, காலமும் களனும் காரணமும் கூட்டிப் பதினொன்று என்பாரும் உளர்;
என்னை,
- 'காலங் களனே காரணம் என்றிம்
- மூவகை யேற்றி மொழிநரும் உளரே'
என்றாராகலின்.
ஆக்கியோன் பெயர் என்பது - நூல் செய்த ஆசிரியன் பெயர் என்றவாறு;
இந்நூல் செய்தார் யாரோ எனின்,
மால் வரை புரையும் மாடக்கூடல் ஆலவாயிற் பால்புரை பசுங்கதிர்க் குழவித்திங்களைக் குறுங்கண்ணியாகவுடைய அழலவிர் சோதி அருமறைக் கடவுள் என்பது.
வழி என்பது - இந்நூல் இன்னதன் வழித்து என்பது. இது,
வினையினீங்கி விளங்கிய அறிவின் முனைவனாற்[1] செய்யப்பட்டதாகலான் வழி நூல் என்று சொல்லப்படாது, முதனூல் எனப்படும் என்பது.
எல்லை என்பது - இந்நூல் இன்ன எல்லையுள் நடக்கும் என்பது.
இந்நூல் எவ்வெல்லையுள் நடக்குமோ எனின்,
வடக்கு வேங்கடம், தெற்குக் குமரி, கிழக்கும் மேற்குங் கடல் எல்லை யாக நடக்கும் என்பது.
என்னை,
- 'வடக்குந் தெற்குங் குடக்குங் குணக்கும்
- வேங்கடம் குமரி தீம்புனற் பௌவமென்
- றந்நான் கெல்லை அகவயிற் கிடந்த
- நூலதின் முறையே வாலிதின் விரிப்பின் '
எனவும்,
- 'வடவேங்கடம் தென்குமரி
- ஆயிடைத்
- தமிழ்கூறு நல்லுலகத்து'
- ↑ (பாடம்) செய்யப்பட்டமையான்