பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூத்திரம்-கஅ) இறையனார் அகப்பொருள் 111 பூசுதும், வேங்கைமரத்தின் கீழ் விளையாடுதும்' என்னும்; அதற்குச் செய்யுள் : குறியிடங் கூறல் 'வந்திணங் காமன்னர் தேயமுன் னாள் மழை யேறுயர்த்த , கந்தணங் காமத யானைக் கழல்மன்னன் கார்ப்பொதியிற் சந்தனஞ் சாந்து செங் காந்தளம் பூத்தழல் போல்விரியும் கொந்தணங் கீர்ப்பிண்டி யாம்விளை யாடுங் குளிர்பொழிலே.' (கசுக) 'காந்தளம் போதெங் கருங்குழற் போது கடையலொன்னார் தாந்தளர்ந் தோடவை வேல்கொண்ட வேந்தன் தண் ணம் பொதியில் சாந்தமெஞ் சாந்தம் விளையா டிடமுந் தளையவிழும் பூந்தளம் பிண்டி எரிபோல் விரியும் பொழிலகமே.' (கசுஉ) குறிஞ்சி நிலமாகையான் இவ்வகை சொல்லும். அல்லாத நிலத்திற்கும் அவற்றிற்குத் தக்கவாறே சொல்லும். இவ்வகை சொல்ல, 'ஒக்கும், “இவை செய்துவந்து நின்மின்" என்றது போலும்' என உணர்ந்து, பிற்றை ஞான்று அப்பூக்கொண்டு சூடி, அச்சாந்து பூசி, அம் மரத்தின் கீழ் விளையாடற் குறிசெய்து நிற்கும்; நின்றவிடத்து அவனது வரவு உணர்ந்து தோழி சொல்லும்; அதற்குச் செய்யுள் : வரவுணர்ந்து வரைதல் ' அணிநிற மாப்பக டுந்திவந் தார்வல்லத் தன் றவியத் துணிநிற வேல்கொண்ட கோன் சொல்லிச் சாரலிச் சூழ்பொழில் மணிநிற மாமயில் என்னைகொல் பொன்னேர் மலர் ததைந்த (வாய் கணிநிற வேங்கையின் மேல்துயி லாது கலங்கினவே.' - (கசு கூ) 'கயில்கொண்ட வார்கழற் போர்மன்னர் ஓடக் கடையற்கண்சேந் தயில் கொண்ட கோனரி கேசரி கொல்லி அருவரைவாய்ப் பயில்வண்டும் தேனும்பண்'போல முரலும்பைம் பூம்பொழில்வாய்த் துயில்கொண் டில துணை யோடுமன் னோசெய்ய தோகைகளே.' () இவ்வாறு தலைமகனது வரவுணர்ந்து, தோழி, 'குவளை அலர்ந்தனவேற் காண்பாம், ' பந்தர் முல்லை அரும்பினவேற் காண்பாம்' எனச் சொல்லித், தலைமகளைக் கொண்டுபோ தரும்; அதற்குச் செய்யுள் : (பாடம்) 1. போல்முரல் வேங்கைப் பசும்பொழில் வாய்த். 2. என்செய்தன. 3. பரந்த.