பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



114 இறையனார் அகப்பொருள் (களவு என்னை , 'குறியதன் இறுதிச் சினைகெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே.' (உயிர் மயங்கியல்- கூஉ) என்றாராகலின். (கக) சூத்திரம் - 20 பகற்குறி தானே இகப்பினும் வரையார். என்பது என்னு தலிற்றோ எனின், பகற்குறியிடம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள் : பகற்குறி தானே என்பது - பகற்குறி யிடந்தான் என்றவாறு ; இகப்பினும் வரையார் என்பது - இகந்துபடினும் குற்றங் கூறார் என்றவாறு. இகத்தல் என்பது ஒன்றின் இறத்தல் என்றவாறு. இகத் தல் எனினும் இறத்தல் எனினும் ஒக்கும்; ஒன்றின் இறத்தல் என்பது பலவாதல் என்றவாறு. ஒரு ஞான்று வேங்கைப் பொதும்பினுள் ஆம்; ஒரு ஞான்று கோங்கம் பொதும்பினுள் ஆம், குறிஞ்சி நிலமாயின். ஒரு ஞான்று புன்னையங்கானலுள் ஆம்; ஒரு ஞான்று கைதையங்கானலுள் ஆம், நெய்தனிலமாயின். இவ்வகை ஏனை நிலத்திற்கும் ஒக்குமாறு அறிந்து உரைக்க. 'பகற்குறிப் புணர்வுகள் பலவா கும்மே.' என்றாராகலின். 'இகப்பினும் வரையார்' என்ற உம்மையால், பகற்குறியும் ஒன்றாகலே வலியுடைத்து; என்னையெனின், தங்குறை முடித் தற்பொருட்டு ஒரு பொழிலகத்தே கொண்டுசென்று விளையாடும் ஆயங்களும் தன்வழிய ஆகலான் என்பது. இனி, யார் அறிவார், பண்டுபோலாது இப்பருவம் ஒரு கானலகத்தே கொண்டு புகுகின்றாள் என்று கருதுவார்க்கு, அறிந்து பல பொழிலினுள்ளும் புகுதலிற் பல பொழிலாகவும் பெறும். (20)