பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூத்திரம்-உக) இறையனார் அகப்பொருள் 115 சூத்திரம் - உக இரவுமனை இகந்த குறியிடத் தல்லது கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை. என்பது என்னு தலிற்றோ எனின், இரவுக்குறி வகுக்கப்பட்ட இடம் வேறுபாடுடையது கண்டு, அவ்வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. . மேல், 'இரவுக்குறி இல்வரை இகவாது' என, இல்வரை யகத்ததன்றெனிற்சாரான். அவற்றுள்ளும் இரவுக்குறியாதல் சென்றது; சென்றதனை நீக்கியவாறு. இதன் பொருள் : இரவு மனை இகந்த என்பது- இரவின் கண் மனையகத்து நீங்கிய என்றவாறு; குறியிடத்து அல்லது என்பது- குறிக்கப்பட்ட இடத்தல்லது என்றவாறு; கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை என்பது - தலைமகற் சேர்தல் தலை - மகட்கு இல்லை என்றவாறு. எனவே, இல்வரைப்பகத்தே ஆக என்பதூஉம், மனைய கத்து ஆகற்க என்பதூஉம் உணரப்பட்டது. அட்டில், கொட்ட காரம், பண்டசாலை, கூடகாரம், பள்ளியம்பலம், உரிமையிடம், கூத்தப்பள்ளி என இவற்றுள் நீங்கிச், செய்குன்றும், இளமரக் காவும், பூம்பந்தரும், விளையாடிடமும், அவற்றைச் சார்ந்தன வற்றுள்ளும் பிறவற்றுள்ளும் ஆக என்றவாறு. எனவே, பகற் குறியிடம் போல வேறுபட்டது ஆகற்க இரவிற்குறியிடம் என் றவாறு, அஃதேயெனின், மனையகத்து ஆக அழிவதுண்டோ எனின், குரவர்கள் உறையும் இடமாதலின் தெய்வத்தானம் என்று கருதப்படும். அல்லதூஉம், புகவும் போகவும் அருமை யுடைமையானும் ஆகாது என்பது; என்றார்க்குச் செய்யுள் : ' வால மனையகத்துச் சார்ந்தான் தலைமகன்.' என்பதுபட வந்தன எனின், அவை அகமல்ல, அகப்புறத்தே அடங்கும் என்பது. 'இரவுக் குறியொன் றெய்தும் அதுவே மனையோர் கிளவி கேட்கும் இடத்துச் செலவுவர வில்லாத் தொழிலிற் றாகி மனையிறந் தெல்லையின் மாண்புடைத் தாகும் அகப்புறம் ஆயின் மறுதலைப் படுமே.' என்றார் பிறரும் எனக்கொள்க.