பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

இறையனார் அகப்பொருள்

[களவு


எனவும் காக்கைபாடினியாரும் தொல்காப்பிய[1]னாரும் சொன்னா ராகலின் என்பது.

நூற்பெயர் என்பது - நூலது பெயர் என்றவாறு.
நூல் பெயர்பெறுமிடத்துப் பல்விகற்பத்தாற் பெயர் பெறும்;
என்னை,

செய்தானாற் பெயர்பெறுதலும்,
செய்வித்தானாற் பெயர் பெறுதலும்,
இடுகுறியாற் பெயர்பெறுதலும்,
அளவினாற் பெயர் பெறுதலும்,
சிறப்பினாற் பெயர்பெறுதலும் என்க.


செய்தானாற் பெயர்பெற்றன: அகத்தியம், தொல்காப்பியம் என இவை.
செய்வித்தானாற் பெயர்பெற்றன: சாதவாகனம், இளந்திரையம் என இவை.
இடுகுறியாற் பெயர்பெற்றன: நிகண்டு, நூல், கலைக் கோட்டுத் தண்டு என இவை.
அளவினாற் பெயர்பெற்றது: பன்னிருபடலம் என்பது.
சிறப்பினாற் பெயர்பெற்றது: களவியல் என்பது;
என்னை,
களவு கற்பு என்னுங் கைகோள் இரண்டனுள் களவினைச் சிறப் புடைத்தென்று வேண்டும் இவ்வாசிரியன்.
என்னை ,
'முற்படப் [2]புணராச் சொல்லின் மையிற்
கற்பெனப் படுவது களவின் வழித்தே ' (இறை - கரு)
என்று வேண்டுதலின். கற்பு, களவுபோல ஒருதலையான அன்பிற்று அன்று.

இனி, யாப்பு என்பது – நூல் யாப்பு,
நூல் யாக்குமிடத்து நான்கு வகையால் யாக்கப்படும்; தொகுத்தும், விரித்தும், தொகைவிரியாகவும், மொழிபெயர்த்தும் என.
என்னை ,

தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்
ததர்ப்பட யாத்தலோ டனைமர பினவே' (மரபியல், கஅ )
என்றாராகலின்.

அவற்றுள், இது தொகுத்தியாக்கப்பட்டது;
என்னை,
உலகத்து நடக்கும் அகப்பொருட் செய்யுளிலக்கணம் எல்லாம் இவ்வறுபது சூத்திரத்துள்ளே தொகுத்தானாகலின் என்பது.


.

  1. (பாடம்) தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரங் கூறிய பனம்பாரனாரும்.
  2. புணராதசொல் லின்மையிற்