பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



141 சூத்திரம்-உக) இறையனார் அகப்பொருள் றானும் அங்கனம் தமர் மறுத்தார் என்பதனைத் தலைமகள் கேட்ட ஞான்றும் ஆற்றாளாம். என்னை, 'நம்பெருமான் ஒருவர்க்கு ஒருகுறை முடிப்பினல்லது ஒருவரை ஒருகுறை வேண்டுந் தன் மையன் அல்லன் ; அல்லாதான் இக்குறை வேண்டியது என் கண் கிடந்த அருளாகாதே ! இவற்கு இவ்விளிவரவு ஆக்கினேன் பாவி யேன்!! எனவும், 'எம்பெருமாற்கு மறுத்தார், இனி மற்றொரு வாறாகாதே!' எனவும் தலைமகள் வேறுபடும் அவ்வேறுபாடு தோழிக்குப் புலனாம்; புலனாயின விடத்து மேற்சொல்லியவாறே அறத்தொடு நிற்கும் என்பது. 'அவன் ஊறு அஞ்சுங் காலம் ஆயினும்' என்பது - தலைமகன் இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற நிலைமைக்கண் எம் பெருமான் வரும்வழி, எண்கும் வெண்கோட்டியானையும் அரவும் உருமும் புலியும் வரையரமகளிரும் வானரமகளிரும் உடைத்து, மற்றும் தெய்வங்கள் வௌவும் வண்ணத்தன, ஏதம் நிகழ்வது கொல்லோ!' என வேறுபடும். அவ்வேறு பாடு தோழிக்குப் புலனாம்; புலனாயினவிடத்து மேற்சொல்லியவாறே அறத்தொடு நிற்கும் என்பது. 'அந்நாலிடத்தும்' என்பது - அச்சொல்லப்பட்ட நான்கு இடத்தும் என்றவாறு; ' 'மெய் நாண் ஒரீஇ' என்பது - மெய்க்கண் நின்ற நாண் நீங்கி என்றவாறு ; நான் உண்டாயினவிடத்துத் தாய்முன் நின்று சொல்லாள் என்பது. 'அறத்தொடு நிற்றல் தோழிக்கும் உரித்தே' என்பது - அறம் என்பது தக்கது; தக்கதனைச் சொல்லி நிற்றல் தோழிக் கும் உரித்து என்றவாறு ; அல்லதூஉம், பெண்டிர்க்கு அறம் என்பது கற்பு, கற்பின் தலைநிற்றல் என்பதூஉமாம். "இனித், தோழிக்கும் உரித்து' என்ற உம்மையால், தலை மகட்கும் அறத்தொடுநிலை உரித்து என்பது. அஃதாமாறு : இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தானும், பாங்கற்கூட்டம் கூடியானும் தெருண்டு வரைந்தெய்தலுற்றுத் தமரைவிடும்; விட்டவிடத்து அவர் மறுப்பர், அஃது இலக்கணமாகலான். அங்ஙனம் மறுத்த விடத்துத் தலைமகள் வேறுபடும். எம்பெருமான் மறுக்கப் பட்டமையான் மற்றொருவாறாங்கொல்லோ!' எனக் கலங்கி வேறுபடும்: வேறுபாடு எய்தினபொழுதே தோழிக்குப் புல னாம்; புலனாயினவிடத்து, 'எம்பெருமாட்டி, நினக்கு இவ்வேறு பாடு எற்றினானாயிற்று' என்னும். என்றவிடத்து, இஃது எனக்குப்பட்டது, இன்னவிடத்து, ஒரு ஞான்று நீயும் ஆய