பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



170 | இறையனார் அகப்பொருள் (கற்பு இதுவும் மேலதனோடு ஒக்கும். இனித், தோழி தலைமகனை, நீர் பிரிந்தவிடத்து இவ்வகை நெடியவாகிய கங்குல்களைத் தமியளாய் எவ்வகை நீந்தி ஆற்றும்?' என்னும்; அதற்குச் செய்யுள் : கங்குல்மிசை வைத்தல் 'வருநெடுங் கங்குலெவ் வாறிவள் நீந்தும்வல் லத்துவென்ற செருநெடுந் தானையெங் கோன்தெவ்வர் போலச்சென் றத்தமென் ஒருநெடுங் குன்றம் மறைந்துல கெல்லாம் உலாய்க்குணபால் (னும் திருநெடுங் குன்றம் கடந்தால் வருவது செஞ்சுடரே.' (உசு அ ) ' படந்தாழ் பணைமுக யானைப் பராங்குசன் பாழிவென்ற விடந்தாழ் சிலைமன்னன் வெல்களம் போல விரிந்த அந்தி நடந்தால் இடையிருள் போய்க்கடை யாமால் லூழிமெல்லக் கடந்தால் அதற்பின்னை அன்றே வருவது காய்கதிரே.' (உசுசு) இதுவும் அது. தோழி தலைமகற்குப் பிரிவு நேர்ந்து, நன்று செய்தாய், அவர் செல்லுங் கானம் இவ்வகைப்பட்டது' என்னும்; அதற் குச் செய்யுள் : காளத்தியல் தோழியுரைத்தல் 'தேனக்க தாரவர் காண்பர் செல் லாரவர் செல்லாட்டி நானக் குழல் மங்கை நன்று செய் தாய்வென்று வாய்கனிந்த மானக் கதிர்வேல் வரோதயன் கொல்லி வரையணைந்த கானத் திடைப்பிடி கையக லாத கருங்களிறே.' (உஎ0) இனித், தோழி தலைமகட்குப், பொருள்முடித்து வந்தான் எம்பெருமான்' என்னும்; அதற்குச் செய்யுள் : தலைமகள் வரவு தோழி கூறல் 'இருள் மன்னு மேகமும் கார்செய் தெழுந்தன எல்வளையாய் மருள் மன்னு வண்டறை தாரவர் தாமுமிம் மாநிலத்தார்க்கு அருள் மன்னு செங்கோல் அரிகே சரி அந்தண் கூடலன்ன பொருள் மன்னும் எய்திப் புகுந்தனர் வந்து நம் பொன்னகர்க்கே. மற்றும், இவ்விடத்துப் பிரிவிடை மெலிந்து ஆற்றாளாகிய தலைமகளைப் பருவம் வந்ததென்று வற்புறுப்ப, வன்பொறை பெதிரழிந்து சொல்லியதற்குச் செய்யுள் :