பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூத்திரம்-சச) இறையனார் அகப்பொருள் 181 என்னோ எனின், பூப்புப் புறப்பட்டஞான்று நின்ற கரு வயிற் றிலே அழியும்; இரண்டாம் நாளின் நின்ற கரு வயிற்றிலே சாம்; மூன்றாம் நாள் நிற்குங் கருக் குறுவாழ்க்கைத்தாம், வாழினும் திருவின்றாம்; அதனாற் கூடப்படாது என்ப. ‘பூப்புமுதன் முந்நாட் புணர வுணரின் யாப்புறு மரபின் முனிவரும் அமரரும் யாத்த கரண மழியு மென்ப.' எனப் பிறரும் ஓதினாராகலான் அமையாது என்பது. (க) சூத்திரம் - சச கற்பினுட் பிரிந்தோன் பரத்தையின் மறுத்தந்து 'அப்பொருட் படுப்பினும் வரை நிலை இன்றே. என்பது என்னுதலிற்றோ எனின், மேலைச் சூத்திரத்திற்கு உரியதோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள் : கற்பினுட் பிரிந்தோன் என்பது - பரத்தையர் சேரியனாய்ப் பூப்பு உணர்த்தப்பட்ட தலைமகன் என்றவாறு, பூப்பு நிகழ்ந்த முதன் மூன்று நாளும் வந்து சொற் கேட்கும்வழி உறைவானிலனாயின் தலைமகன் கற்பினுட் பிரிந்தோன் எனப்பட்டான் ; கற்பு என்பது பூப்பு என்றவாறு ; அப்பூப்புக் கற்புக்காலத்தன்றிக் களவுகாலத்து நிகழாமை நோக்கிப் பூப்பினையுங் கற்பு என்று சொல்லினார் என்பது ; பரத்தையின் மறுத்தந்து என்பது - அம்மூன்று நாளுங் கழித்துப் பரத்தையர்சேரிநின்று நீங்கி வருவது என்றவாறு ; அப்பொருட் படுப்பினும் என்பது - அறத்தாறுபடுப்பினும் என்றவாறு ; அறத்தாறு படுத்தல் என்பது, தலைமகளை வாயில்களால் சிவப்பாற்றுவித்துப் புக்குத் தலைமகளோடு புணர்தல்; வரைநிலை இன்றே என்பது - குற்றமெனப்படாது அத்துணைச் சிறப்பின்றாயினும் என்றவாறு. தலைமகளை வாயில்களாற் சிவப்பாற்றுவித்தற்குச் செய்யுள் : தலைமகளைச் சிவப்பாற்றுவித்தல் 'பொன்னார் புனலணி ஊரன் வந் துன்னிற் புறங்கடையான் என்னா அளவிற் சிவந்தாள் சிவந்தும் இயல்பதுவன் றன்னா யெனச்சிவப் பாற்றினள் வல்லத் தரசவித்த மின்னார் அயில்மன்னன் தென்புனல் நாடன்ன மெல்லியலே.' () என்பது. (க்க)