பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இறையனார் அகப்பொருள் (களவு

நூல்

இனிப், பாயிரம் 1மேலொட்டு உரைஉரைத்தபின்னர் நூல் உரைக்கற்பாலது.
அதுதான் நான்குவகையான் உரைக்கப்படும்:
அவை யாவையோ எனின்,

நூல் நுதலியது உரைத்தலும்,
நூலுள் அதிகாரம் நுதலியது உரைத்தலும்,
அதிகாரத்துள் ஒத்து துத லியது உரைத்தலும்,
ஒத்தினுட் சூத்திரம் நுதலியது உரைத்த லும் என இவை.
அவற்றுள், நூல் நுதலியது உரைக்கு மிடத்து, நூலாமாறும் நூல் என்ற சொற்குப் பொருளாமாறும் உரைத்து உரைக்கற்பாற்று.
மூவகை நூலும், எதிர் நூலும்


அவற்றுள், நூல் ஆமாறு உரைக்குமிடத்து, நூல் தான் மூன்று வகைப்படும்,
முதனூலும் வழி நூலும் சார்பு நூலும் என:

என்னை ,

'முதல்வழி சார்பென நூல்மூன் றாகும்' என்றாராகலின்.

அவற்றுள், முதனூல் ஆவது - வரம்பில் அறிவன் பயந்த தாகும் :
என்னை ,

' வினையி னீங்கி விளங்கிய வறிவின்
முனைவன் கண்டது முதல் நூ லாகும்' (மரபியல், கக) எனவும்,
'முதல்வன் நூற்குப் பிறன்கோட் கூறாது' எனவும்,
' தந்திரஞ் சூத்திரம் விருத்தி மூன்றற்கு
முந்து நூல் இல்லது முதல்நூ லாகும்' எனவும் சொன்னாராகலின்.

இனி, அந்நூலோடு ஒத்த மரபிற்றாய் ஆசிரிய மத விகற்பம் படக் கிளப்பது வழிநூல் எனப்படும்,
என்னை ,

' முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப்
பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி
அழியா மரபினது வழி நூ லாகும் ' என்றாராகலின்.


(பாடம்) 1. உரைத்த பின்றை நூலாமாறும்.