பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூத்திரம்-நிசு) இறையனார் அகப்பொருள் 201 பாசிநீக்கம் வருமாறு : 'சென்றார் வருவது நன்கறிந் தேன்செருச் செந்நிலத்தை வென்றான் பகைபோல் மெலியல் மடந்தையும் வெற்பெடுத்து நின்றான் அளந்த நிலமும் குளிர்ந்தது நீள்புயலால் பொன் தான் மலர்ந்து பொலங்கொன்றை தாமும் பொலிந்தனவே.' கொண்டு கூட்டுப் பொருள்கோள் வருமாறு : 'கோவைக் குளிர்முத்த வெண்குடைக் கோன்நெடு மாறன் முந்நீர் தூவைச் சுடர்வே லவர் சென்ற நாட்டுள்ளும் துன்னுங்கொல்லோ பூவைப் புதுமலர் வண்ணன் திரைபொரு நீர்க்குமரிப் பாவைக் கிணையனை யாய்கொண்டு பண்டித்த பன்முகிலே.' (ஙகஅ ) ஒருசிறைநிலை வருமாறு: 'கோடல் மலர்ந்து குருகிலை தோன்றின கொன்றைசெம்பொன் பாடல் மணிவண்டு பாண் செயப் பாரித்த பாழிவென்ற ஆடல் நெடுங்கொடித் தேரரி கேசரி அந்தண்பொன்னி நாடன் பகைபோல் மெலிகின்ற தென்செய்ய நன்னுதலே.' (நக்க) விற்பூட்டு என்பது, தலையும் கடையும் பொருள் கொள்வது; விதலையாப்பு என்பது, தலையும் இடையும் கடையும் பொருள் கொள்வது; பாசிநீக்கம் என்பது, சொற்றோறும் அடிதோறும் பொரு ளேற்று நிற்பது ; கொண்டு கூட்டு என்பது, சொற்களைக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளுமாறு அறிந்துகொள்வது; ஒருசிறைநிலையென்பது, ஒரு பாட்டினகத்துச் சொல்லப் பட்ட பொருள் ஒருவழி நிற்பது. ஆங்கப்பத்தே என்பது-ஆங்கு என்பது அசைச்சொல்; பத்து என்பது தொகை ; ஏ என்பது ஈற்றசை ஏகாரம்; அகனைந்திணையும் உரைத்தலாறே என்பது - அகனைந் திணையும் அறிந்து உரைக்க அகப்பாட்டினை வல்லோர் சொல்லு மடத்து என்றவாறு. 'முளிதரு வேனற்கண் கானவர் ஆர்ப்ப முகிற்கணங்கள் தளிதரு தண்சிலம் பாதக்க தன்று தரணிதன்மேல் அளிதரு செங்கோல் அரிகே சரி அந்தண் கூடலன்ன ஒளிதரு வாள் நுத லாள்நைய இவ்வா றொழுகுவதே.' இப்பாட்டிற்குத்