பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



202 இறையனார் அகப்பொருள் (கற்பு திணை : குறிஞ்சி ; கைகோள் - களவு ; கூற்று - தோழி கூற்று ; கேட்டான் - தலைமகன் ; இடம் - முன்னிலை ; காலம் - எதிர்காலம், வந்து ஒழுகாநின்றானுக்கு உரைத்த மையான் நிகழ்காலமாகவும் கொள்க ; எச்சம் - நீ யென்பது எஞ்சிற்று ; மெய்ப்பாடு - அச்சம், இவ்வொழுக்கம் பிறரறியின் இறந்து படும் என்னும் நிலையினளாயினமையின் ; பயன் - வரைவுகடாதல் ; பொருள்கோள் - தளிதரு தண்சிலம்பா தக்கதன்று இவள் நைய இவ்வாறு ஒழுகுவது எனக் கொண்டமையின், விதலை யாப்பு. ' மானக் கடுஞ்சிலை மான்தேர் வரோதயன் வாள்முனைபோன் ௗனப் படநினைந் தூடல்பொன் னேயுறு வெஞ்சுரத்து நானக் குழல்மிசை நான் கொய்து கொண்டு நயந்தணிந்த கானக் குரவினம் போதே கமழுமென் கைத்தலமே.' (கூஉக) இப்பாட்டுத் திணை - மருதம் ; கைகோள் - கற்பு; கூற்று - தலைமகன் கூற்று, தலைமகன் பரத்தையைக் கோலச்சிறப்புச் செய்தானென்று வேறுபடலுற்ற தலைமகள் குறிப்பறிந்து தலைமகன் சொல்லியது; கேட்டாள் - தலைமகள் ; இடம் - முன்னிலை ; காலம் - இறந்த காலம் பற்றிவந்த நிகழ்காலம் ; எச்சம் - என்னோடு என்பது எஞ்சிற்று ; மெய்ப்பாடு - நடுக்கம்; பயன் - கேட்டுத் தலைமகள் ஊடல் தீர்வாளாவது; பொருள்கோள் - விதலையாப்பு, 'யான் கொய்து அணிந்த குரவினம் போதே இன்னும் கமழும் என் கைத்தலம்' என்று மூன்றிடத்துப் பொருள் கொண்டமையான் என்பது. (உங)