பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



'சூத்திரம்-ருஅ) இறையனார் அகப்பொருள் 203

சூத்திரம் - 57

அவற்றுள்
எச்சமும் கோளும் இன்மையும் உரிய.

என்பது என்னுதலிற்றோ எனின்,
மேற்கூறப்பட்ட பத்தினுள் ளும் எச்சமும் கோளும் இன்றியும் உரிய என்பது உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள் :
அவற்றுள் என்பது - மேற் கூறப்பட்ட பத்தினுள்ளும் என்றவாறு ;
எச்சமும் கோளும் இன்மையும் உரிய என்பது - எச்சமானும் கோளானும் அவ்விரண்டி னுள்ளும் ஒன்றொழிந்தும் இரண்டும் ஒழிந்தும் நிற்கவும் பெறும் என்றவாறு.
அவற்றுள், எச்சமின்றி வந்ததற்குச் செய்யுள் :

' ஆமான் அனையமென் னோக்கி அழுங்க லகன்று சென்ற
தேமா நறுங்கண்ணி யாரையுங் காட்டுந்தென் பாழிவென்ற
வாமா நெடுந்தேர் மணிவண்ணன் மாறன்வண் தீந்தமிழ்கர்
கோமான் கொடிமே லிடியுரு மார்க்கின்ற கூர்ம்புயலே.'
(322)

இனிக்,
கோளின்றி வந்தது வருமாறு:

வாடு நிலைமையை நீக்கிமண் காத்துவல் லத்தெதிர்ந்தார்
ஓடு நிலைமைகண் டான்வையை யொண்ணுதன் மங்கையரோ
டாடு நிலைமையை அல்லை அவரொடம் பூம்பொழில்வாய்
நீடு நிலையையும் அல்லை சொல் லாயென் நெடுந்தகையே.' (323) எனக் கொள்க.
(24)

சூத்திரம் - 58

சொல்லே குறிப்பே ஆயிரண் டெச்சம்.

என்பது என்னு தலிற்றோ எனின்,
மேற்கூறப்பட்ட எச்சம் இரண்டு வகைப்படும் என்பது உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொருள் :
சொல்லே குறிப்பே ஆயிரண்டு எச்சம் என்பது - சொல்லெச்சமும் குறிப்பெச்சமும் என இரண்டு எச்சம் ஆம் என்றவாறு.

சொல்லெச்சம் என்று சொல்லப்பட்ட வாய்பாடன்றிப் பிறவாய்பாட்டால் தோன்றினும் என்றவாறு.
எச்சம் என்பது ஒழிதல் என்றவாறு.