பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

இறையனார் அகப்பொருள்

களவு

என்னை ,

'முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே

நுவலுங் காலை முறைசிறந் தனவே.' (அகத்திணையியல் - க) என்றாராகலின்.


ஐந்திணை முதற்பொருள்'’'

அவை வருமாறு :

அவற்றுள், முதல் இரண்டு வகைப்படும்,

நிலமும் பொழுதும் என.

என்னை ,

'முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின்

இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே'

(அகத்திணையியல் - ங)

என்றாராகலின்,


குறிஞ்சிக்கு நிலம், மலையும் மலைசார்ந்த இடமும்; பொழுது, கூதிரும் யாமமும் முன்பனியும்.


நெய்தற்கு நிலம், கடலும் கடல் சார்ந்த இடமும்; பொழுது, எற்பாடு.

பாலைக்கு நிலம் இல்லை.

'நடுவண் ஐச் திணை நடுவண தொழியப்

படுதிரை வையம் பாத்திய பண்பே'

(அகத்திணையியல் - உ)

என்றார் தொல்காப்பியனார் ஆகலின், பொழுது, நண்பகலும், வேனிலும், பின்பனியும். நிலம் இன்றிப் பொழுதினானே திணை யாமோ எனின், குறிஞ்சியும் முல்லையும் அடுத்த நிலமே காலம் பற்றிப் பாலை நிலமாம் என்பது.

முல்லைக்கு நிலம், காடும் காடுசார்ந்த இடமும்; பொழுது, காரும் மாலையும்.

மருதத்திற்கு நிலம், பழனமும் பழனஞ் சார்ந்த இடமும்; பொழுது, வைகறை யாமம்.


அஃது என்னை பெறுமாறு எனின்,

'மாயோன் மேய காடுறை யுலகமும்

சேயோன் மேய மைவரை யுலகமும்

வேந்தன் மேய தீம்புன லுலகமும்

வருணன் மேய பெருமண லுலகமும்'