18
களவு
என்னை ,
'முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே.' (அகத்திணையியல் - க) என்றாராகலின்.
ஐந்திணை முதற்பொருள்'’'
அவை வருமாறு :
அவற்றுள், முதல் இரண்டு வகைப்படும்,
நிலமும் பொழுதும் என.
என்னை ,
'முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே'
(அகத்திணையியல் - ங)
என்றாராகலின்,
குறிஞ்சிக்கு நிலம், மலையும் மலைசார்ந்த இடமும்; பொழுது, கூதிரும் யாமமும் முன்பனியும்.
நெய்தற்கு நிலம், கடலும் கடல் சார்ந்த இடமும்; பொழுது, எற்பாடு.
பாலைக்கு நிலம் இல்லை.
'நடுவண் ஐச் திணை நடுவண தொழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே'
(அகத்திணையியல் - உ)
என்றார் தொல்காப்பியனார் ஆகலின், பொழுது, நண்பகலும், வேனிலும், பின்பனியும். நிலம் இன்றிப் பொழுதினானே திணை யாமோ எனின், குறிஞ்சியும் முல்லையும் அடுத்த நிலமே காலம் பற்றிப் பாலை நிலமாம் என்பது.
முல்லைக்கு நிலம், காடும் காடுசார்ந்த இடமும்; பொழுது, காரும் மாலையும்.
மருதத்திற்கு நிலம், பழனமும் பழனஞ் சார்ந்த இடமும்; பொழுது, வைகறை யாமம்.
அஃது என்னை பெறுமாறு எனின்,
'மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை யுலகமும்
வேந்தன் மேய தீம்புன லுலகமும்
வருணன் மேய பெருமண லுலகமும்'