பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



19 சூத்திரம்-க) இறையனார் அகப்பொருள் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.' (அகத் - 6) ' காரு மாலையு முல்லை.' (அகத் - சு) 'குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர்.' (அகத் - எ) ‘ பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப.' (அகத் - அ ) 'வைகுறு விடியல் மருதம்.' (அகத் - க) ' எற்பாடு நெய்த லாதல் மெய்பெறத் தோன்றும்.' (அகத் - 50) ' நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே.' (அகத் - கக) ‘ பின்பனி தானும் உரித்தென மொழிப.' (அகத் - கஉ) மருதத்திற்கும் நெய்தற்கும் பெரும்பொழுது சொல்லிற் றின்மையின், அறுவகை . இருதுவும் உரிய எனக் கொள்க : இவை முதல். ஐந்திணைக் கருப்பொருள் இனிக், கரு என்பது தெய்வமும் உணாவும் மாவும் மரமும் புள்ளும் பறையும் செய்தியும் யாழும் முதலாக உடையது; / என்னை , 'தெய்வம் உணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின் பகு தியொடு தொகைஇ' அவ்வகை பிறவுங் கருவென மொழிப.' (அகத் - 20) என்றாராகலின். அவை அம்முறையானே சொல்லுதும். குறிஞ்சிக்குத், தெய்வம் - முருகவேள் ; உணா - ஐவன நெல்லும், தினையும் ; மா - புலியும், பன்றியும், யானையும் ; மரம் - அகிலும், ஆரமும், திமிசும், தேக்கும், வேங்கையும்; புள் - கிளியும், மயிலும் ; பறை - வெறியாட்டுப்பறையும், தொண்டகப்பறையும், குரவைப்பறையும்; (பாடம்) 1. தொகை இய.