பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூத்திரம்-க) இறையனார் அகப்பொருள் 23 ஊர் - பேரூர் எனப்படும். இக் கூறப்பட்ட கரு மயங்கியும் வரப்பெறும்; என்னை, எப்யோம் ஸ்கரா suriபைட் ' எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும் வந்த நிலத்தின் பயத்த ஆகும்.' (அகத்-2) என்றாராகலின். ஐந்திணை உரிப்பொருள் இனி, உரிப்பொருள் ஆவது திணைக்கு உரியபொருள் என்ற வாறு. அவை யாவையோ எனின், புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல், அவற்றின் நிமித்தம் என இவை ; என்னை , 'புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் இவற்றி னிமித்த மென்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே.' (அகத்-கசு) என்றாராகலின். அவற்றுள், புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி ; பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலை ; இருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லை ; இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்தல் ; ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதம். புணர்தலே கொல்லோ குறிஞ்சி எனின், புணர்தலே அன்று ; பிரிவச்சமும், வன்புறையும், தலைமகன் நீங்கினவும், ' பாங்கற்கு உரைத்தனவும், பாங்கன் கழறினவும், தலைமகன் எதிர்மறுத்தனவும், பாங்கன் எதிர்ந்தனவும், தலைமகளைக் கண் டனவும், ஆற்றானாயினவும், தலைமகன் சென்றனவும், தலைமகன் தலைப்பெய்தனவும் இத்தொடக்கத்தனவெல்லாம்; தலைமகட்கும் தோழிக்கும் இவ்வகையானே நோக்கி விகற்பிக்க, இறப்பவும் பலவாம். அவை யெல்லாம் புணர்தலும் புணர்தல் நிமித்தமு மாய் அடங்கும். ஏனையவற்றிற்கும் இவ்வாறே கொள்க. திணை இள்ளது என்பது இனி, ஒழுக்கத்தினைத் திணை என்பாரும், நிலத்தினைத் திணை என்பாரும் என இருபகுதியர் ஆசிரியர். அது பொருந்