பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



36 இறையனார் அகப்பொருள் (களவு எனின், பின்னையும் எஞ்ஞான்றும் மெய்யுறவுவகை கூடாதாம். புத்திரலாபத்திற்கு மெய்யுறுபவே எனின், கருமப்பொருட் டன்றி வேட்கையில்லை என்பதனால், உள்ளப்புணர்ச்சி உரை பன்று, மெய்யு றுபுணர்ச்சியே வேண்டும் என்பது. சொற்பாடு

இனி, ஒரு சாரார் உரைக்குமாறு : மெய்யுறுபுணர்ச்சி தக்கது, இன்சொல்லும் கூற்றும் இன்றிப் பசுப்போலப் புணர்ந்தார் என்பது தகாது. சொற்படுகால் முறைமையான் நிகழ்ந்து புணர் தல் தகவுடைத்து. அவை யாவையோ எனின் - காட்சி, ஐயம், தெளிதல், தேறல் என இவை. அவற்றுள்,

காட்சி என்பது - இருவரும் தம்முட் கண்ணுறுவது. அதற்குச் செய்யுள்;

'பூமரு கண்ணிணை வண்டாப் புணர்மென் முலை அரும்பாத்
தேமரு செவ்வாய் தளிராச் செருச்செந் நிலத்தை வென்ற
மாமரு தானையெங் கோன்வையை வார்பொழி லேர்கலந்த
காமரு பூங்கொடி கண்டே களித்த எம் கண்ணிணையே.'

ஐயம் என்பது - கண்ணுற்ற பின்னை ஐயப்படுவது. எங்ஙனமோ எனின், வரையரமகள் கொல்லோ, வானரமகள் கொல்லோ, நீரரமகள் கொல்லோ, இத்துணை மேதகவுடையாள்! அன்றி, மக்களுள்ளாள் கொல்லோ ! என்றும் ஐயப்படுவது. அதற்குச் செய்யுள் :

'உரையுறை தீந்தமிழ் வேந்தன் உசிதன் தென் நாட்டொளிசேர்
விரையுறை பூம்பொழின் மேலுறை தெய்வங்கொ லன்றிவிண்தோய்
வரையுறை தெய்வங்கொல் வானுறை தெய்வங்கொல் நீர் மணந்த
திரையுறை தெய்வங்கொல் ஐயந் தருமித் திருநுதலே.' (உ)

இவளும் அவனை ஐ'யட்படும். கடம்பமர் கடவுள் கொல்லோ , இயக்கன் கொல்லோ! அன்றி, மக்களுள்ளான்கொல்லோ என்று இங்கனம் ஐயப்படும். இவ்வகை நினைந்தபின்னைத் தெளிவு வருமாறு : ஆடை மாசுண்டலானும், கால் நிலந்தோய்தலானும், கண் இமைத்த லானும், கண்ணி வாடுதலானும், சாந்து புலர் தலானும் என்று இங்ஙனந் தெரியும்; தெரிந்த பின்னைத் துணியும் என்பது. அதற்குச் செய்யுள் :

'பாவடி யானைப் பராங்குசன் பாழிப் பகை தணித்த
தூவடி வேல்மன்னன் கன்னித் துறைச்சுரும் பார்குவளைப்
பூவடி வாள் நெடுங் கண்ணும் இமைத்தன பூமிதன் மேற்
சேவடி தோய்வகண் டேன்தெய்வ மல்லளிச் சேயிழையே.' (3)