பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



இறையனார் அகப்பொருள் (களவு வழியே செல்லாநின்றான் இழுக்கினால், அவ் விழுக்கினை இழுக் காவது அறிந்து, அதன்கணின்று மீடல் மிக்கது; மீண்டு நிற் கிலான் எனின், இவ்வாறு ஒழுகும் என்று அவன் ஒழுகும் திறம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள் : ஆங்ஙனம் புணர்ந்த கிழவோன் என் பது - அவ்வாறு கூடிப்பிரிந்த தலைமகன் என்றவாறு; தன் வயின் பாங்கனோரிற் குறி தலைப்பெய்தலும் என்பது - தன் பாங்கனாற் குறியிடத்துத் தலைப்பெய்தலும் என்றவாறு; பாங் கிலன் தமியோள் இடந்தலைப்படலும் என்பது - பாங்கனை யின்றித் தனியாளை இடத்து எதிர்ப்படுதலும் என்றவாறு; ஆங்க என்பது அசைச்சொல்; இரண்டு என்பது தொகை; தலைப்பெயல் மரபே என்பது - தலைப்பெய்தற்கு இலக்கணம் என்றவாறு. அவ்வாறு புணர்ந்து நீங்கிய தலைமகன் பிற்றைஞான்று தன் பாங்கனாற் குறியிடத்துத் தலைப்பெய்தலும், பாங்கனையின்றியே தனியாளை இடத்து எதிர்ப்படுதலும் என அவ்விரண்டில் ஒன்றே தலைப்பெய்தற்கு இலக்கணம் என்றவாறு. அவ்வகை புணர்ந்த கிழவோன் என்பது, தெய்வம் இடை நிற்பப் பான்மையால் உய்க்கப்பட்டு யாரும் இல் ஒரு சிறைத் தலைப்பெய்த தலைமகன் என்றவாறு, எனவே, அவ்வாறு புணரப் பட்டாள் தலைமகள் எனப்பட்டது. கிழமையுடைமையின் கிழவன் எனப்பட்டது, தலைமை யுடைமையின் தலைமகன் என்னப்பட்டது; அவட்கும் அவ்வாறே கொள்க. பங்கற் கூட்டம் இனிப் பாங்கற்கூட்டம் ஆமாறு சொல்லுதும் : இயற் கைப்புணர்ச்சி புணர்ந்து ஆற்றுவித்துப் பிரிந்த தலைமகன் ஆங்குப்பட்ட வார்த்தை யெல்லாம் நினைக்கும். நினைக்குமாறு யாதோ எனின், 'நின்னிற் பிரியேன், பிரியேன் ஆற்றேன்' எனச் சொல்லிப், 'பிரியப்பட்டாள் தன்னைக் காணாத என் நிலைமை கரீ நினைந்து ஆற்றாளாங்கொல்லோ' எனவும், 'ஆற்றாளாகி நின்றாள் தனது வேறுபாட்டைப் புறத்தார் (அறியாமை மறைக்குமாறு அறியாது வருந்துங்கொல்லோ' எனவும், இவை முதலாயின நினைந்து ஆற்றானாம். உற்றது வினுதல் ஆற்றாநிலைமையானைப் பிற்றைஞான்று சிறுகாலையே தலைப் படும் பாங்கன்; தலைப்பட்டு, அடியிற்கொண்டு முடிகா றும்