பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



62 இறையனார் அகப்பொருள் (களவு

'யான் காவற் குற்றப்பட்டேன்' எனத் தோழி கவலுமாகலான்.
தலைமகன் உணர்த்தியதனாற் பயன் என்னோ எனின்,
நெடுங் காலம் ஒழுகக் கருதுவான், 'யான் பிரிந்தபோது இவளை ஆற்று வித்துக்கொண்டு இருக்கும்' என்பதனானும்,
ஒருநாள் இதனை யறியும், அறிந்தக்கால் கதுமென ஆற்றாளாங்கொல்லோ' என்பதனானும்,
இவ்வாறு உணர்த்தல் ஆற்றுதற்குக் காரணமாம் என்பதனானும் உணர்த்தும்.

இது பொருந்தாது என்ப ஒரு சாரார்;
என்னை, பகற் குறிக்கண் இது நிகழுந்துணையும் நடவாது;
இவ்வகை வந்த சான்றோர் செய்யுளும் இல்லை.
இதனானே, 'எவ்விடத்தானும்' என்பது, நன்று மறுத்தற்குச் சொல்லப்பட்டது; மிகையன்று என்பது.
'கூட்டக்கூடல் களவிற்கு இல்லை' என்றிரால், பாங்கற் கூட்டம், தோழியிற்கூட்டம் என்று பேரிட்டது எற்றிற்கோ எனின்,
அவர் 'துணையாயினமையின் அவ்வாறு சொல்லப்பட் டது,
துணையாயினாரைக் கூட்டினார் என்னாமோ எனின், என்னாம்;
கூடும் இருவரும் அக்கருத்தினர் அல்லராகலான் என்பது.

சூத்திரம் - 5


புணர்ந்த பின்றை யாங்ஙனம் ஒழுகாது
பணிந்த மொழியால் தோழி தேஎத்து
இரந்துகுறை யுறுதலுங் கிழவோன் மேற்றே.

என்பது என் நுதலிற்றோ எனின்,
பாங்கனானாதல், தமியாளை இடத்து எதிர்ப்பட்டாதல் புணர்ந்த தலைமகன்,
அதன் பின்னே தெருண்டு வரைதல் தலை;
அல்லாவிடின், இவ்வாறு ஒழுகும் என்று, அவன் ஒழுகுந் திறம் உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள் :
புணர்ந்த பின்றை என்பது - பாங்கனானானும் தமியாளை இடத்து எதிர்ப்பட்டானும் புணர்ந்த பின்றை என்றவாறு;
ஆங்ஙனம் ஒழுகாது என்பது - பிற்றை ஞான்றும் அப்பெற்றியே ஒழுகாது என்றவாறு;
பணிந்த மொழியான் என்பது - இழிந்த சொற்களான் என்றவாறு;
இழிந்த சொல் என்பது, வாய்பாட்டு இன்னாமை நோக்கிப் பணிந்த மொழி எனப்பட்டது!
பணிந்த மொழியன்றே, 'இத்தழை நல்ல, இக் கண்ணி நல்ல' என்று இங்கனம் கையுறை பாராட்டிச் சென்று நிற்றல்;
தனக்குத் தகாது, இழிந்தார்க்கன்றே அஃது உரியது என்பது;
தோழி தேஎத்து என்பது - தோழிமாட்டு என்ற