பக்கம்:இறைவர் திருமகன்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101

ஜுடாஸ் கடுந்துயரத்திற்காளானான். குருக்கள்மார் முன்னால் தன் கையில் இருந்த வெள்ளிக் காசுகளைத் தரையில் வீசி எறிந்து விட்டு அங்கிருந்து விரைந்து சென்றான்.

அன்பே வடிவமான - யாருக்கும் கிடைக்காத அரும்பேறான - ஓர் இனிய தலைவருக்கு இரண்டகம் செய்த தான் உயிர்வாழ்வதற்கே தகுதியற்றவன் என்ற உணர்வுடன் அவன் சென்று கொண்டிருந்தான். இறுதியில் தன்னை யழுத்தும் துன்பத்தைத் தாங்க முடியாமல் தூக்குப்போட்டுக் கொண்டு இறந்து போனான்.

ஏசு-1