பக்கம்:இறைவர் திருமகன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

"அந்தப் பாவம் எங்களைச் சேரட்டும், அவருடைய இரத்தம் எங்களைச் சேரட்டும்; எங்கள் குழந்தைகளைச் சேரட்டும்!" என்று கூட்டத்தில் இருந்த எல்லாரும் ஒருமித்துக் கூறினார்கள்.

இதைக் கேட்டபின், அவன், கொள்ளைக்காரன் பாரபாசை விடுதலை செய்தான். இயேசு நாதரைச் சிலுவையில் அறையுமாறு தன் வீரர்களிடம் ஒப்படைத்தான்.