பக்கம்:இறைவர் திருமகன்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

115

நான் அறிவேன். அவர் இப்போது இங்கு இல்லை அவர் எழுந்து சென்றுவிட்டார் வாருங்கள்; அவர் கிடந்த இடத்தை வந்து பாருங்கள்.

"செத்தவர்களிருந்து அவர் எழுந்துவிட்டார் என்ற இச் செய்தியை அவரின் சீடர்களிடம் கூறுங்கள். அவர் கலீலிக்குச் சென்றுள்ளார். அங்கே நீங்கள் அவரைக் காணலாம்."

தேவதூதன் கூறிய இச் செய்திகளைக் கேட்டு அச்சமும் மகிழ்ச்சியும் ஒருங்கே அடைந்த அப்பெண்மணிகள் மற்ற சீடர்களைத் தேடி விரைந்து சென்றார்கள்.

அவர்கள் மற்ற சீடர்களைத் தேடிச் சென்ற போது இயேசுநாதர், "யாவரும் வாழ்க!” என்று கூறிக் கொண்டே அவர்களைச் சந்தித்தார். அவர்கள் இருவரும் திருவடியைப் பற்றிக் கொண்டு வணங்கினார்கள்.

"அஞ்சாதீர்கள்! கலீலிக்குச் செல்லுமாறு என் அன்பர்களிடம் கூறுங்கள். அங்கு அவர்கள் என்னைக் காணலாம்" என்று கூறினார்.

அப்பெண்மணிகள் சீடர்களைத் தேடிச் சென்று கொண்டிருந்த போது காவலுக்கிருந்த வீரர்களில் சிலர் ஓடிச்சென்று குருமார்களிடம் நடந்ததெல்லாம் கூறினார்கள்.