பக்கம்:இறைவர் திருமகன்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

குருமார்கள் அந்த வீரர்களிடம் நிறையப் பணத்தை அள்ளிக் கொடுத்தார்கள். “அந்த மனிதனுடைய சீடர்கள் இரவில் வந்து, நீங்கள் தூங்கும் போது அவர் உடலைத் திருடிக் கொண்டு போய் விட்டதாகச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அந்தக் காவல் வீரர்களும் அவ்வாறே செய்தார்கள்

இயேசுநாதரின் பதினொரு சீடர்களும், அவர் குறிப்பிட்டபடி கலீலியில் ஒரு மலையில் சென்று அவரைச் சந்தித்தார்கள். அவரைக் கண்டவுடன் அவர்கள் வணங்கினார்கள். அப்படியும் அவர்களில் சிலருக்கு ஐயமாகவே யிருந்தது.

“விண்ணுலகிலும் மண்ணுலகிலும் எல்லா அதிகாரமும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, நீங்கள் இப்போதே புறப்படுங்கள். எல்லா நாடுகளிலும் என் போதனைகளைப் பரப்புங்கள். எல்லாருக்கும் தந்தையான இறைவன் பெயராலும், அவர் மகனாகிய என் பெயராலும், புனிதஆவியின் பெயராலும், எல்லாருக்கும் திருமுழுக்குச் செய்து வையுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ள எல்லா நன்னெறிகளையும் யாவருக்கும் போதியுங்கள். நான் எப்போதும் உலக முடிவுகாலம் வரையிலும் உங்களுடனே இருப்பேன்! அவ்வாறேயாகுக!” என்று கூறிச் சென்றார் இயேசு நாதர்.