பக்கம்:இறைவர் திருமகன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

டேவிட் அரசர் பிறந்த இந்தப் பழம் பெரு நகரிலே இன்று மக்களைக் காக்கவந்த மகன் இயேசு பெருமான் பிறந்திருக்கிறார். புல்யொன்றிலே கந்தைத் துணிகளால் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் ஒரு குழந்தையை நீங்கள் காணலாம், அந்தக் குழந்தையே உங்கள் காப்போன் ஆவார்.”

தேவதூதனின் இந்த அதிசய மொழிகளைக் கேட்டு அந்த ஆட்டிடையர்கள் மலைத்துப் போனார்கள். மேலும் அதிசயமான சில காட்சிகளை அவர்கள் கண்டார்கள். வானக முந்தும் தேவதூதர்கள் பலர் வந்து நின்று வாழ்த்துப் பாடல்கள் பாடினார்கள்.

பாடி முடிந்ததும் தேவதூதர்கள் மறைந்து விட்டார்கள். "வாருங்கள்! நாம் பெத்தலெம் நகருக்கு போவோம். இறைவனால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்த உண்மையை நாம் கண்டு வருவோம்" என்று பேசிக் கொண்டு அந்த ஆட்டிடையர்கள் புறப்பட்டார்கள். பொழுது விடியும் கருக்கல் நேரத்தில் அவர்கள் பெத்தலெம் நகருக்குள் வந்து சேர்ந்தார்கள்.

சத்திரத்தின் சிறிய தொழுவத்தை அவர்கள் கண்டார்கள். மெல்ல மெல்ல அந்தத்