பக்கம்:இறைவர் திருமகன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. அறிஞர் மெச்சிய அறிஞன்

மன்னன் ஹெராடு இறந்த பின் சோசப் தன் மனைவியையும் மகனையும் எகிப்திலிருந்து கூட்டிக் கொண்டு வந்து நாசரத் என்ற சிற்றூரில் தங்கினான்.

நாசரத் ஓர் அழகிய ஊர். அங்கே இயேசு நன்றாக வளர்ந்து வந்தான். நண்பர்களுடன் சேர்ந்து பள்ளிக்குச் சென்று வந்தான். இயேசுவுக்கு வயது பனிரெண்டாகியது. அப்போது நாசரத்தில் உள்ளவர்கள் ஆண்டு தோறும் ஆவலோடு எதிர் பார்க்கும் ஒரு நாள் வர விருந்தது. அது யூதர்களின் விருந்து விழா ஆகும். அவ்விருந்து விழாவிற்கு எல்லா ஊர்களிலிருந்தும் செருசலம் நகருக்கு வருவார்கள். ஆண்டுக்கொரு முறை எல்லோரும் கூடி நடத்தும் அந்த விருந்து விழா மிகச் சிறப்பாயிருக்கும்.