பக்கம்:இறைவர் திருமகன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

அவ்வளவு தான் பெற்ற மனம் பகீர் என்றது. பிள்ளையைக் காணோமே என்று கலங்கி அவர்கள் மீண்டும் செருசலத்தை நோக்கித் திரும்பினார்கள். வழியெல்லாம் விசாரித்துக் கொண்டே நகருக்குள் நுழைந்தார்கள். நகரில் புகுந்து வீதிவீதியாகத் தேடினார்கள், எங்கும் இயேசு காணப் படவில்லை. கடைசியில் அவர்கள் ஆலயத்தை அடைந்தார்கள். ஆலய மண்டபத்தின் நடுவே பண்டிதர்களின் சிறுகூட்டம் ஒன்று இருந்தது. அந்தப் பண்டிதர் கூட்டத்தின் இடையே இயேசு அமர்ந்திருந்தான். அவர்கள் கூறும் வாசகங்களைக் கேட்டுக் கொண்டும், அவர்கள் கேள்விகட்கு விடையளித்துக் கொண்டும் இருந்தான் அவன்.

அந்த யூத அறிஞர்கள் சிறுவனின் அறிவுத் திறத்தைக் கண்டு வியந்தார்கள். அவனோ தன்னை மறந்து அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தான்.

இந்தக் காட்சியைக் கண்ட மேரிக்குப் பொருமையாகத் தான் இருந்தது. இருந்தாலும் 'மகனே! இப்படிச் செய்யலாமா? நாங்கள், உன்னைக் காணாமல் எவ்வளவு துடித்துப்