பக்கம்:இறைவர் திருமகன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

போனோம்? எங்கேங்கே தேடினோம் தெரியுமா?” என்று வருந்திய குரலில் கேட்டாள்.

"அம்மா என்னைத் தேடினீர்களா? நான் என் தந்தையின் வீட்டில் தான் இருப்பேன் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்டான் இயேசு. இறைவன் ஆலயத்தைத் தான் தந்தையின் வீடு என்று குறிப்பிட்டான் அவன்.

பின்னர் அந்த அறிஞர்களிடம் விடை பெற்றுக் கொண்டு தன் தாய்தந்தையருடன் வீட்டுக்குத் திரும்பினான் இயேசு.