பக்கம்:இறைவர் திருமகன்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

ஆலயத்தின் ஒரு கோபுரத்து உச்சியில் வைத்தது.

“நீ கடவுளின் பிள்ளையாய் இருந்தால் கீழே குதி. ஏனென்றால் நீ கீழே குதித்தால், கல்லில் நீ மோதி விடுமுன்னால் தேவ தூதர்கள்வந்து உன்னைத் தங்கள் கைகளில் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று வேதத்தில் எழுதப் பெற்றிருக்கிறது. அது உண்மையா என்று பார்க்கலாம்" என்று கூறியது சைத்தான்.

"உன் கடவுளாகிய இறைவனை நீ சோதிக்க முற்படாதே! என்றும் வேதத்தில் எழுதப் பெற்றிருக்கிறது" என்று இயேசு பதில் சொன்னார்.

மீண்டும் சைத்தான் அவரை ஒரு பெரிய மலைக்குக் கொண்டு சென்றது. அங்கிருந்தவாறே உலகப் பேரரசுகள் எல்லாவற்றையும் அவற்றின் செல்வச் சிறப்புக்களையும் அது சுட்டிக் காட்டியது.

"நீ என்காலடியில் விழுந்து வணங்கினால் இந்த அரசுகள் செல்வங்கள் அனைத்தையும் உனக்குத் தருகிறேன்" என்றது.