பக்கம்:இறைவர் திருமகன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. அடுத்தவன் என்றால் யார்?

இயேசுநாதரின் திருவுரைகள் ஏராளமான மக்களைக் கவர்ந்தன. அவர் தமக்குள்ள அற்புதமான இறையருளால், தம்மை வந்து சார்ந்தோரின் குறைகளையெல்லாம் நீங்கச் செய்தார். நாள்தோறும் அவரைத் தேடி வந்த கூட்டத்தின் அளவு பெருகிக் கொண்டே போயிற்று. ஒரு நாள் அவர் ஒரு மலையின் மீது ஏறிச்சென்று ஓரிடத்தில் அமர்ந்தார். அவருடைய சீடர்கள் அவரைப்பின்தொடர்ந்து சென்றார்கள். தம்மைச் சூழவந்து நின்ற சீடர்களை நோக்கி அவர் பல புதிய பொருள்களைக் கூறிப் போதித்தார். இறையருளைப் பெற அவர் போதித்த அறநெறிகள் புதுமையானவையாகவும், பொருத்தமானவையாகவும், விரும்பிப் பின்பற்ற ஏற்றனவாகவும் இருந்தன. அவர் திருவாயிலிருந்து வெளி வந்த அந்த வாசகங்கள் மனித சமுதாயத்தையே மேன்மைப்படுத்துவனவாக இருந்தன.